India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை(செப்.,1) நடுவக்குறிச்சி, சேந்தமடத்தில் தலா 2 கடைகளும் திருவேங்கடம் சாலை, சுரண்டை சாலை, ராஜபாளையம் சாலை, பாம்பு கோயில் சந்தை சாலை, அச்சம்பட்டி, கடையநல்லூர், கரிவலம், அத்திப்பட்டி கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22 டாஸ்மாக் கடைகள், 4 பார்கள் மூடப்படுவதாக ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், செப்.,1 ஆம் தேதி நடைபெறவுள்ள நெற்கட்டான்செவல் பூலித்தேவர் ஜெயந்தி விழாவிற்கு தென்காசி MP டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு பூலித்தேவன் மக்கள் கழகம் சார்பில் நேற்று(ஆக.,30) அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து விழா குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. உடன் மேலநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவ் உள்ளிட்டோர் இருந்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdad.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலகரத்தையை சேர்ந்த பொன்னுசாமி தனது மகளை திருவிருத்தான் புள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு சேர்த்து 12 நாட்கள் பள்ளி சென்ற நிலையில் தான் கட்டிய பணத்தை கேட்ட போது பள்ளியில் நிர்வாகம் தர மறுத்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மாணவிக்கு ரூ.1.28 லட்சம் இழப்பீடாக பள்ளி நிர்வாகம் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் வருவாய் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரிபடுத்தவும், தனி வட்டாட்சியர் தலைமையில் 2 அலகுகளில் வருவாய் பின்தொடர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாற்றத்திற்கான கடிதம் நில உடமைதாரர்களின் விட்டிற்கே வந்து வழங்கப்படும். பின்னர் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில் அஜராகி பட்டா மாறுதல்களை பெறலாம்.
தென்காசி மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்காக போலீசார் இன்று நியமிக்கப்பட்டனர். தென்காசியில் குற்றாலம் ஆய்வாளர் மனோகரன், ஆலங்குளத்தில் ஆய்வாளர் லட்சுமி பிரபா, புளியங்குடியில் ஆய்வாளர் கண்மணி ,சங்கரன் கோவிலில் ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் தலைமையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கரிவலம் அந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சோமசுந்தரம் நெல்லை டி ஐ ஜி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக ஆடிவேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் மின் விளக்கு அமைத்தல் குறித்து விளக்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார். உடன் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. செப். 3 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(ஆக.30) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.