India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் சளி இருப்பவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெறவும் முக கவசம் அணியவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவுறுத்தினார் .
தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்திய அரசு ஏற்கனவே ஜிஎஸ்டி என்கிற பெயரில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாடகை செலுத்தி கடை நடத்துவோர் கடை வாடகைக்கு மாதந்தோறும் 18% ஜிஎஸ்டி வழியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தினார் .
தென்காசி மாவட்டத்தில் Trektamilnadu திட்டத்தின் கீழ் குற்றாலம் செண்பகாதேவி அருவிக்கு மலையேற்றம் மேற்கொள்ள விரும்புவர்கள் <
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய காலை நிலவரப்படி 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 68 அடி, 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 57.50 அடி 72 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 47 அடி, குண்டார் அணை நீர்மட்டம் 36 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சங்கரன்கோவில் MLA ராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நவ.,27ஆம் தேதி துணை CM உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒன்றிய நகர பேரூர் பகுதியில் புதிய கொடி கம்பங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு நடத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும், அந்நாளை எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் நேற்று(நவ.,24) கேரள மாநில பதிவெண்கள் கொண்ட லாரிகள் எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றி கேரளாவுக்கு சென்றன. மருதமுத்தூரை அடுத்த ராம் நகரில் லாரிகள் சென்றபோது 2 இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கண்ணாடி சேதமடைந்தது. 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 23 விவசாய சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வேட்பு மனுக்களை தொடர்பு உடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற நவ.,27,28 தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். 28ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்ட பிரிவுகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பட்டியலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணை அழைத்து தகவல் சொல்லலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.