Tenkasi

News December 5, 2024

தென்காசி: 5 உலக சாதனை படைத்த 7 மாத குழந்தை!

image

தென்காசியை சேர்ந்த லயா என்ற பெண் குழந்தை 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. குழந்தையின் நுண்ணறிவு திறனை பாராட்டி நேற்று(டிச.,4) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அவர்களும் தற்போது குழந்தையை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பெற்றோருக்கு நுண்ணறிவு திறனை மேலும் வளர்ப்பதற்கான அறிவுரையும் வழங்கினார். SHARE IT.

News December 5, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.4 இரவு 10 மணி முதல் டிச.5 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2024

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவான் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் அனைத்து புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.

News December 4, 2024

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற திங்கள் (9.12. 2024) தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையம் நடைபெற உள்ளது. முகாமில் ஐடிஐ 2 ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டம்பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் ஔவையார் விருதுக்காக விண்ணப்பிக்கலாம். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் அவ்வையார் விருது பெற <>https://awards.tn.gov.in<<>> இணையதளம் வழியாக 31.12. 2024க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ஆலங்குளம் அருகே கலைஞர் அறிவாலயம் கட்ட பூமி பூஜை

image

ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணி பூமி பூஜை இன்று(டிச.,4) நடந்தது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பேரூர் செயலாளர் ஜெகதீசன் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் மாவட்ட பிரதிநிதி பொன்.செல்வன், சீனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், பொன்.அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 4, 2024

தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், எஸ்பி ஶ்ரீனிவாசன் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலன்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்களின் ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

News December 4, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(டிச2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

தென்காசி பத்திர பதிவு அலுவலங்களில் கூடுதல் டோக்கன்

image

வருகிற டிசம்பர் 5ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்ய அதிகமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திர பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதூர், வடகரை அச்சன்புதூர், கீழப்பாவூர், சிவகிரி, ராயகிரி, இலஞ்சி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 78 நபர்கள் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் அளித்து அரசு பணி பெற்றதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்து இன்று அதிரடியாக 78 பேரை பணி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!