India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் மஸ்தான் தர்கா பகுதியில் உள்ள சாலைகளில் மற்றும் சாலையின் ஓரங்களில் மான்கள் நடமாட்டம் இருக்கிறது. இரவில் வாகனத்தில் இப்பகுதியில் செல்பவர்கள் மெதுவாக கவனத்துடன் இப்பகுதியை கடக்கவும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று டிச.6 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்குறிப்பிட்ட எண்ணையோ அல்லது அவசர அழைப்பு எண் 100 -க்கோ தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-க்கும் தொடர்பு கொள்ளலாம்.
சங்கரன்கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நகர கூடைப்பந்து கழகம் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 3 நாட்கள் கூடைப்பந்து போட்டி நடக்கிறது. இதையொட்டி இன்று(டிச.,6) மாலை தொடங்கும் போட்டியை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தொடங்கி வைக்கவுள்ளதாக நகர கூடைப்பந்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி, வீரசிகாமணி, சங்கரன்கோவில் & கடையம் பகுதியில் நாளை(டிச.,7) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புளியங்குடி வட்டாரத்தில் சிந்தாமணி, அய்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சங்கரன்கோவில் வட்டாரத்தில் களப்பாகுளம், வாடிகோட்டை, சோலைசேரி சுற்றுப் பகுதிகளிலும், கடையத்தில் கீழ கடையம், சேர்வைக்காரன் பட்டி, முதலியார்பட்டி பகுதியிலும் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று(டிச.,5) வருகை தந்த திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளரும், மாநில சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவருமான இறையன்பு குத்தூஸை தென்காசி நகர் மன்ற தலைவரும், தென்காசி நகர திமுக செயலாளருமான சாதிர் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.5) இரவு 10 மணி முதல் நாளை (டிச.6) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று (05.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடையம் அருகே உள்ள ராமநதி அணையிலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று(டிச.,5) தண்ணீர் திறந்து வைத்தார். ராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த் தேக்கத்திலிருந்து 117நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் முதல் வட்ட நீதிமன்றங்கள் வரை தேசிய நீதிமன்றம் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிலுவை அசல் வழக்குகள், மோட்டார் வழக்குகள், குடும்ப விளக்குகள் மேலும் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
தென்காசியை சேர்ந்த லயா என்ற பெண் குழந்தை 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. குழந்தையின் நுண்ணறிவு திறனை பாராட்டி நேற்று(டிச.,4) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அவர்களும் தற்போது குழந்தையை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பெற்றோருக்கு நுண்ணறிவு திறனை மேலும் வளர்ப்பதற்கான அறிவுரையும் வழங்கினார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.