Tenkasi

News December 8, 2024

எழில் வாணன் எழுதிய நூலை முதல்வர் வெளியிட்டார்

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாவட்ட கலைப்பிரிவு நிர்வாகி எழில்வாணன். இவர், “அவர் தான் கலைஞர்” என்ற நூலை எழுதியுள்ளார். இதனை நேற்று சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். இதில் இளங்கோவன் ,ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 8, 2024

கடையநல்லூர் பகுதியில் நகை தொலைத்தவருக்கு அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் ரோடு பகுதியில் HP பெட்ரோல் நிலையத்தின் அருகில் நேற்று (டிச.7) தங்க நெக்லஸ் (மாலை) கண்டெடுக்கப்பட்டு கடையநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைத்தவர்கள் சரியான அடையாளத்தை கூறி பெற்றுக்கொள்ளவும். மேலும் டிஎன்டிஜே கடையநல்லூர் பேட்டை கிளை தொடர்பு எண் 9344933787- தொடர்பு கொள்ளலாம். புகைப்படத்தில் மறைக்கப்பட்ட நகை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது

News December 7, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

தென்காசியில் தென் மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

image

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் அனைத்து இதர பிரிவுகளிலும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை இன்று தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

News December 7, 2024

செயற்கை ஆபரண பொருட்கள் இலவச தயாரிப்பு முகாம்

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு செயற்கை ஆபரண பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு டிசம்பர் 9ஆம் தேதி முதல் இலத்தூர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் அவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.

News December 7, 2024

சோழன் உலக சாதனைக்காக யோகா போட்டி

image

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ட் பள்ளியில் சன் யோகாசன ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சோழன் உலக சாதனை யோகா போட்டி இன்று  நடந்தது. இதில் புளியங்குடி திருநாவுக்கரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் நிஷாந்தினி, ஆருஷ் ஹர்ஷத் ஆகியோர் உலக சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிவபப்பிஸ்ராம் பாராட்டினார்

News December 7, 2024

சுரண்டையில் மாவட்ட அளவிலான கோலப்போட்டி தொடக்கம்

image

சுரண்டை தனியார் ஜவுளி கடை சார்பில் 2025ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, அனைத்து ஊர் பகுதிகளிலும் மாவட்ட அளவிலான கோலப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியின் தொடக்க விழா இன்று கீழ சுரண்டையில் நடந்தது. இதற்கு சுரண்டை வேலாயுதநாடார் குரூப்ஸ் எஸ்வி கணேசன் கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், கடை உரிமையாளர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

தென்காசியில் டிச.,18 முதல் ஆட்சி மொழி வாரம்: கலெக்டர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆட்சி மொழி சட்ட வாரம் வருகிற 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்பட உள்ளது. இதில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். ஹோட்டல், கடைகளில் ஒட்டுவில்லை ஒட்டி கொண்டாட வேண்டும் என்றார்.

News December 7, 2024

தென்காசியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

#தென்காசி மாவட்டத்தில் இன்று(டிச.,7) காலை 9.30 மணிக்கு, இலத்தூர் பாரத் கல்லூரியில் நேரு யுகவேந்திரா மூலம் இளைஞர் கலை விழா நடைபெறுகிறது. #காலை 10 மணியளவில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. #தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கலை பண்பாட்டு துறையின் மூலம் கலைப்போட்டிகள் நடைபெறுகிறது.

News December 7, 2024

கடையநல்லூர் பகுதிகளில் மான்கள் நடமாட்டம்

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் மஸ்தான் தர்கா பகுதியில் உள்ள சாலைகளில் மற்றும் சாலையின் ஓரங்களில் மான்கள் நடமாட்டம் உள்ளது. இரவில் வாகனத்தில் இப்பகுதியில் செல்பவர்கள் மெதுவாக கவனத்துடன் இப்பகுதியை கடக்கவும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!