Tenkasi

News December 11, 2024

கபீர் புரஸ்கார் விருது: டிச.,15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சாதனை புரிந்த ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்பு துறையினர் இந்த விருந்து பெற தகுதியானவர்கள் awardstn.gov.in என்ற இணையதளத்தில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News December 11, 2024

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

image

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று (டிச.11) வெளியாகியுள்ளது. அதில் மல்லிகிலோ ரூ.2000, பிச்சிப்பூ கிலோ ரூ.800, சம்பங்கி கிலோ ரூ.160, கேந்தி கிலோ ரூ.80, சேவல் கிலோ ரூ.60, கனகாம்பரம் கிலோ ரூ.1000, ரோஸ் கிலோ ரூ.300, செவ்வந்தி கிலோ ரூ.160, மரிக்கொழுந்து கிலோ ரூ.60, தாமரை 1க்கு ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

News December 11, 2024

தென்காசியில் ஐயப்பன் திரு ஆபரண பெட்டிக்கு வரவேற்பு!

image

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் மஹோற்சவ விழாவை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து 33-வது ஆண்டாக எடுத்துவரப்படும் திரு ஆபரண பெட்டிக்கு தென்காசியில் டிசம்பர் 15 ஆம் தேதி வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் ஹரிஹரன், செயலாளர் மாடசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

News December 11, 2024

தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் ரயில்!

image

செகந்திராபாத் – கொல்லம்(07175) இடையே வரும் 19 & 26 ஆம் தேதி ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக வண்டி எண் கொல்லம் – செகந்திராபாத்(07176) இடையே 21 & 28 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சபரிமலை சிறப்பு ரயிலாக விருதுநகர் – தென்காசி – புனலூர் வழித்தடத்தில் இயங்க இருக்கிறது. நல்கொண்டா, குண்டூர், தெனாலி, ஒங்கோல், ரேணிகுண்டா, காட்பாடி, தி.மலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

News December 11, 2024

தென்காசி மாவட்டத்தில் கனமழை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழையால் தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள்(டிச.,13) ஒரு நாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு பகுதியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 10, 2024

தென்காசி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.10) இரவு 10 மணி முதல் டிச.11 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

இளைஞருக்கு அரிவாள் வெட்டு – மேலும் ஒருவர் கைது

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று பொதிகை ரயிலில் பயணிக்க சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே, கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சூர்யா என்பவரை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2024

தென்காசி: திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புளியறை ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில், ஊராட்சியை சேர்ந்த ஊர்வசி மற்றும் விஜி திருநங்கைள் ஆகியோருக்கு வேலை அடையாள அட்டையை ஊராட்சி மன்ற தலைவர் இன்று(டிசம்பர் 10) வழங்கினார். அவர்கள் வேலை அடையாள அட்டை பெற்று வேலைக்கு வர முடியாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

ஆலங்குளம்: மதகு ஷட்டரை திருடி மது குடித்த 3 பேர் கைது!

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெட்டைக் குளம் என்ற குளத்தின் மதகு ஷட்டரை திருடி மது அருந்தியுள்ளனர். திருடிய பணத்தில் பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியது வெளியே தெரிந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் நேற்று(டிசம்பர் 9) வழக்குப் பதிந்து சந்தன மாரிமுத்து(38), சுமேஷ்(32), மகாதேவன்(30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News December 10, 2024

100 கிலோமீட்டர் வேகத்தில் நாளை சோதனை ஓட்டம்

image

தென்காசி – பகவதிபுரம் இடையே நாளை (10.12.24) அதிவேக ரயில் சோதனை ஓட்டம்நடைபெற உள்ளது . தென்காசி செங்கோட்டை பகவதிபுரம் இடையே 100 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. தற்போது தென்காசி – பகவதிபுரம் இடையே அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் ஆக உள்ள நிலையில் 90 ஆக உயர்த்த திட்டம் இருப்பதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!