India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவிகளில் சீரமைப்பு பணி காரணமாக குளிப்பதற்கு தடை தொடர்கிறது. அதை தவிர குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலியருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. ஐந்தருவிகளில் பெண்கள் கூட்டம் இல்லாமல் சாதாரணமாகவே இருக்கிறது. மற்ற அருவிகளில் மிதமான கூட்டமே காணப்படுகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, தற்போது சற்று சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
“தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியின் பெயரைப் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 09220517098 என்ற எண்ணிலிருந்து தங்களின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை அனுப்பப்படுகிறது என வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படுகிறது. இதனை நம்பி வங்கி விவரங்களை பகிர வேண்டாம்” என பள்ளி தலைமை ஆசிரியர் இன்று வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் (டிச.17) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100- ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்குறிச்சியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் செட்டிகுளம், சிவசைலம், சம்பன் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்களை வழக்கம்போல் இன்று காலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். பேருந்து ஆனது செட்டிகுளத்தில் தொடர் மழை காரணமாக பள்ளத்தில் சாய்ந்தது. எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாணவர்கள் மாற்று வண்டியில் பள்ளி சென்றனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று (டிச.16) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அலுவலக வளாகத்தில் வரும் டிச.20 அன்று 10.00am – 02.00pm வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் <
திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு நாராயண சுவாமி நாயுடு விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு குடியரசு தின விழாவில் ரூ.5 லட்சம் பரிசும், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும் என கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கடந்த வாரம் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. அதன்படி செகந்திராபாத் – கொல்லம் சிறப்பு ரயிலை பொங்கல் வரை நீட்டிப்பு செய்வதாக ரயில்வே நிர்வாகம் நேற்று(டிசம்பர் 15)அறிவித்துள்ளது. இந்த செய்தி தென்காசி பயணிகளுடைய வரவேற்பு பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாளாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில், மாவட்டத்தில் 51 குடிசை வீடுகள் பாதி சேதமாகவும், 10 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சேத விவரங்களை தொகுத்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கனமழை நின்றதைத் தொடர்ந்து பள்ளிகள் வழக்கம்போல் நாளை(டிச.16) இயங்கும். பள்ளிகளில் மழை நீர் தேங்கியிருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம். மேலும், பள்ளிகளில் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் (டிச.15) இரவு 10 மணி முதல் (டிச.16) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.