India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு வருகிற வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பேரிடர் காலங்கள் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இன்று (அக்.15) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை தொடர்பு கொண்டு மழைக் காலங்களில் பொதுமக்கள் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு முடுக்கியுள்ளது. இதற்காக தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அதனால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. மேலும் உதவி தேவைப்பட்டால் அவரச எண் 101-க்கு அழைக்கலாம். SHARE IT.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில்சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்துக்கல்வலசை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வேலை வாய்ப்பு தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி பாரதிய ஜனதா கட்சி உடைய மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் உடைய முன்னாள் முதல்வர் முனைவர். ராஜேஸ்வரி கிருஷ்ணகுமார் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக, தென்காசி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.14) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான குற்ற கலந்தாய்வு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 15-ம் தேதி காலை தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து அப்துல்கலாமின் நினைவை போற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. தங்களுடைய குடும்ப அட்டை ஆதார் உள்ளிட்டவற்றை பாலித்தீன் கவரில் பத்திரப்படுத்தி கொள்ளுமாறு” கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில் கோட்டாட்சி தலைவர் ஜெயசந்திரன், முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களின் அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியிடம் கொடுக்கின்ற பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி தென்காசியை சேர்ந்த நபர்கள் ரூ.89 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வீடு நிலங்களை விற்று, பணத்தையும் இழந்து தவிப்பதாகவும், தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.