India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (நவ 3) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போகநல்லூரில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கு தண்டவாளத்தில் அடிக்கடி கற்கள் வைக்கும் சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிப்பதற்கு இன்று நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கீழ சுரண்டை வடக்கு தெடு ஆறுமுகசாமி (54) இவரது தம்பி மாரியப்பன் இருவருக்கும் இடையே பாதைசம்மந்தமாக பிரச்சனை இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகசாமியை மாரியப்பன் அவரது தரப்பை சார்ந்தவர்களும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு மாரியப்பன் மகன் மணிகண்டன், மாரியப்பன் மனைவி ரீனா, மகள் ஜெயசந்தரி, மருமகன் தீனதயாளன் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இடி,மின்னலுடன் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (நவ 2) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவராக தாயார்தோப்பு எம்.எஸ்.ராமரை, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவரும் கன்னியாகுமரி எம்பியுமான விஜய்வசந்த் நியமனம் செய்தார். நியமனக் கடிதம் பெற்றுக்கொண்ட தாயார்தோப்பு எம்.எஸ்.ராமரை, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், வர்த்தக அணி மாநில செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், கனமழையால் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் முன்னனெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். விடுமுறைநாளையொட்டி இன்று(நவ.2) காலையில் தடை நீக்கப்பட்டநிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியைச்சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கும் சசிகலா(34) என்பவருக்கும் திருமணமாகி பிரித்திக்ஷா என்ற மகள் உள்ளார். இதனிடையே நேற்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவன் மனைவியை தாக்கியதில் மனைவி உயிரிழந்தார். இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (நவ 1) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் நாளை (நவ.02) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மின் விநியோக அலுவலகத்திற்குட்பட்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.