India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்க நாளை(ஜன. 21) மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்” என தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் இன்று(ஜன.20) மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை தீர்க்க கோரி 455 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாஜக முக்கிய நிர்வாகி மாடசாமி என்ற கண்ணன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபிசி பிரிவு தென்காசி மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கட்சியில் தனக்கு அங்கீகாரம் இல்லை என கூறி நேற்று வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.
தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவர் ஆனந்தன் நேற்று(ஜன.19) கூறியதாவது, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைத்து பூர்வாங்க பணிகளும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும். அதிகமான அளவில் சூறையாடப்படும் கனிமவள கொள்ளை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மாநில தலைமை ஆலோசனையின்படி நடத்தப்படும் என்றார்.
தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்கள் இன்று (ஜன.19) நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்தின் பாஜக புதிய மாவட்டத் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் நேற்று முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர்.
சங்கரன்கோவிலில் இன்று(ஜன.19) நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சங்கரன்கோவில் வருகை தந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, இன்று காலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றிரவு(ஜன.18) முதல் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனி மற்றும் கனமழையால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளுமையான காநிலை நீடித்து வருகிறது.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பாண்டியன், அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் சுசீகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது விழாக்குழுவினர் ராஜேந்திர பாலாஜிக்கு வீரவாளை பரிசாக வழங்கினர்.
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருவதால், இன்று(19/1/25) லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.