India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விருதுகளை காண்பித்து நேற்று(செப்.13) வாழ்த்து பெற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைத்திட விதிமுறைகளுக்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது அக்.,20க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.13) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை(செப்.14) நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், செல் எண் பதிவு, மாற்றம் செய்தல் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் & அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம்
தாம்பரம்-ராமநாதபுரம்(06103) இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையாக செப்.19, 21, 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 ராமநாதபுரம் வந்து சேரும். இடையே மானாமதுரையில் காலை 4.28க்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக (06104)ராமநாதபுரத்தில் இரவு 10.55 புறப்பட்டு மானாமதுரையை இரவு 11.53க்கு கடந்து தாம்பரம் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று (செப்.2) மானாமதுரையில் சுமார் ரூ.2 லட்சத்தை தனது ஸ்கூட்டர் சீட்டுக்கு கீழ் வைத்துவிட்டு ஹோட்டலில் உணவருந்த வண்டியை நிறுத்தியுள்ளார். சாப்பிட்ட பிறகு வந்து வண்டியை பார்த்தபோது வண்டியில் இருந்த 2 லட்சம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் யானை சுப்புலட்சுமி.யானைக் கொட்டகையில் பெரும் தீ விபத்து காயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று சுப்புலட்சுமி யானையை பார்வையிட்டு மருத்துவரிடம் யானையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 14.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024 – 2025ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக, ரூ.1,912.95 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். நகை கடன் ரூ.1,117.50 கோடி, பயிர் கடன் ரூ.200 கோடி, மகளிர் குழு கடன் ரூ.182.25 கோடி, கால்நடை பராமரிப்பு கடன் ரூ.75 கோடி, மற்ற கடன்கள் ரூ.338.20 கோடி என இலக்கு வைத்துள்ளனர். கடந்த வருடம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.549.80 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர்.
சிவகங்கை கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில், நேற்று(செப்.11) 2 அடி ஆழத்தில் சுடுமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 செ.மீ நீளமும், 23 செ.மீ அகலமும், 6 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. எனவே இங்கு கட்டுமான குடியிருப்போ அல்லது தொழிற்சாலையோ இருந்ததா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.