Sivagangai

News September 24, 2024

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்

image

காரைக்குடி ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பாலசுப்ரமணியன் 132 கார்களின் லோகோ என்று சொல்லப்படும் சின்னங்களை 58 நொடிகளில் கூறி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இம்மாணவரின் உலக சாதனையை அங்கீகரித்து கலாம் உலக சாதனை பதிவேற்றில் பதிவேற்றப்பட்டு சான்றிதழ் மெடல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி ஆலோசகர் சுப்பையா வாழ்த்தினார்

News September 23, 2024

கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஆயுள்தண்டனை

image

சோழபுரத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் லோகநாதன்(57) அதே பகுதியில் ஒரு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அப்பணியில் வெல்டராக பணிபுரிந்த பன்னீர்செல்வத்திற்கும் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் லோகநாதன் கட்டையால் தாக்கியதில் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று லோகநாதனுக்கு சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News September 23, 2024

உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்பு தோல்வியுற்றவர்களுக்கு ரூ.300, +2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

பொருளாதார மேம்பாட்டுக் கழக ஆலோசனைக் கூட்டம்

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்(டாம்கோ)தலைவர் சி.பெர்ணான்டஸ் ரத்தின ராஜா தலைமையில் திட்டசெயல்பாடுகள் குறித்து நாளை மறுநாள் (செப்.25) ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ள  கூட்டத்தில், சிறுபான்மையின மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

52 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்

image

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் கண்மாயில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளி மாநிலம் & ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரத் தொடங்கின. பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் குஞ்சுகளுடன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருப்பிடங்களுக்கு சென்றுவிடும். இதனால் இப்பகுதி கிராம மக்கள் 52 ஆண்டுகளாக தீபாவளி மற்றும் திருவிழாவுக்கு பட்டாசு வெடிப்பதில்லை.

News September 23, 2024

மானாமதுரை & அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (செப்.24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களில் மானாமதுரை,சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை,சங்கமங்கலம், குறிச்சி,முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயர் பொறியாளர் அறிவித்துள்ளார்

News September 22, 2024

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

image

முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சார்ந்தோர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.25 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 27.09.2024 அன்று முற்பகல் 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

கல்லால் தாக்கி இளைஞர் கொலை

image

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த அழகுசுந்தரம் மகன் பழனிமுருகன் (30). இவா் பிச்சைப் பிள்ளையேந்தல் பகுதியில் நேற்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பாச்சேத்தி போலீஸாா் அவரின் உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2024

சிவகங்கை மக்கள் கால்வாயில் இறங்க வேண்டாம்

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக கடந்த 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!