Sivagangai

News August 9, 2025

சிவகங்கை: அஜித்குமார் வழக்கு CBI திடுக் தகவல்..!

image

மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News August 8, 2025

ஆக.11 போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

image

தமிழகம் முழுவதும் 11.8.2025 அன்று முதலமைச்சர் காணொலி காட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடக்க இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு.

News August 8, 2025

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️ SP – 04575-240427

▶️ ADSP – 04575-243244, 04575240587

▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213

▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574

▶️ காரைக்குடி (DSP) – 04565-238044

▶️ மானாமதுரை (DSP) – 04574-269886

▶️ சிவகங்கை (DSP) – 04575-240242

▶️ Share This Useful Content…

News August 8, 2025

சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

image

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News August 8, 2025

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வரும் 11.8.2025 அன்று குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. விடுபட்டவர்களுக்கான முகாம்கள் வருகின்ற 18.8.2025 அன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

சிவகங்கையில் நாய் கடித்து 18,033 பேர் பாதிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து தடுப்பூசி போட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2025

சிவகங்கையில் 39 சிறப்பு முகாம்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாரத்திற்கு வீடுதோறும் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் குறித்த தகவலுக்கு 104 இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முகாம்களைப் பயன்படுத்தி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் நலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

News August 8, 2025

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க கோரிக்கை

image

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற நடிகர் கமலஹாசன் நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்பொழுது கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியும், தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை இந்த உலகிற்கு உரக்க சொல்ல பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

News August 8, 2025

சிவகங்கையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கைமாவட்ட சமூக நல அலுவலரை 04575-240426 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 8, 2025

சிவகங்கையில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு

image

சிவகங்கையில் நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. முக்கியமாகக் குழந்தைகள் வைத்திருப்போருக்கு இந்த செய்தியை SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்கள்.

error: Content is protected !!