India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், கட்டானிக்குளத்தில், நேற்று 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரையில் வசிக்கும் கட்டானிக்குளம் சதீஷ்குமார் என்ற இளைஞர் சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் பழகி, அவரை அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்து, சதீஷ்குமாரை போலீசார் இன்று (அக்.25) கைது செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தீபாவளியன்று ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. எனவே கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் காலை 6.00 முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 முதல் 8.00 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆக்.25) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.49.52 லட்சம் மதிப்பில் பள்ளத்தூர் மற்றும் கூத்தலூர் தொடக்க கூட்டுறவு வங்கி சார்பில் வட்டியில்லா கடன் உதவியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு டான்பெட் மானிய விலையில்லா தரமான உரங்களையும் வழங்கினார். இதில் கூட்டுறவு துறை அலுவலர் மண்டல இணைபதிவாளர் ராஜேந்திரன் பிரசாத் உடன் இருந்தனர்.
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, அரசு கடந்த பட்ஜெட்டில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கியது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கீழடி அகழாய்வு தளத்தில் ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை சார்பில் தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழும் என தொல்லியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் அக். 27 மருதுபாண்டியர் நினைவு நாள், அக்-30 தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்.26 மாலை 6 முதல் அக்.27 முழுவதும் & அக்.29 மாலை 6 மணி முதல் அக்.30 முழுவதும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் மூடப்படும்.
மதுரை தல்லாகுளம் சோமசுந்தரத்திற்கு காரைக்குடியில் சொந்தமாக 27,405 சதுர அடி இடம் உள்ளது. தேரளப்பூரைச் சேர்ந்த ராமசாமி மகன் சோமசுந்தரம் உட்பட்ட மற்றும் ஆள்மாறாட்டம் செய்து போலி பவர் பத்திரம் தயார் செய்ததில் 11 பேர் மீது வழக்கு பாய்ந்தது. சோமசுந்தரத்தை ஆக-12ல் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முத்து சாக்ரடீஸ், அப்பாஸ் இருவரும் சிவகங்கை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் இன்று மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கேஆர். பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் பி.மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிங்கம்புணரியை சேர்ந்தவர் மகேந்திரன்(45) இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கினார். சிறுமி 18 வயதை கடந்த நிலையில், அவருக்கு அக்-22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண் யாருக்கும் தெரியாமல், தனக்குத் தானே பிரசவம் பார்த்தார். பின் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், குழந்தை கை, கழுத்தை கத்தியால் அறுத்து, மகேந்திரன் வீட்டின் முன் போட்டார். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஒடிசாவை சேர்ந்தவர் குண்டல். இவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.6 கோடி வரை ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுகுறித்து ஒடிசா போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிலரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் பல லட்சம் ரூபாயை காரைக்குடி,தேவகோட்டயை சேர்ந்த 4 பேரின் வங்கி கணக்கிற்கு வந்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வருகிற 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 223 வது நினைவு தினம் அரசு சார்பிலும், 27ம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பிலும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆட்சியர் 163(144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.