India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*
சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*
தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் எத்தனையோ பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெண்களை இழிவாக நடத்துவதும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 1500 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 149 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
சிவகங்கை மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்களுக்கான நியமன கடிதத்தை நேற்று (ஆக.09) காரைக்குடியில் சிவகங்கை எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் நிர்வாகிகள் இடம் வழங்கி வாழ்த்தினார். உடன் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, காரைக்குடி எம்எல்ஏ எஸ்.மாங்குடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், புதிய நிர்வாகிகள் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்
▶️கானாடுகாத்தான் – 04565-283583
▶️நாட்டரசன்கோட்டை – 04575-234300
▶️இளையான்குடி – 04564-265246
▶️திருப்புவனம் – 04574-265391
▶️மானாமதுரை – 04574-268237
▶️நெற்குப்பை – 04577-245411
▶️சிங்கம்புணரி – 04577-242939
▶️திருப்பத்தூர் – 04577-266295
▶️பள்ளத்தூர் – 04565-283683
▶️கண்டனூர் – 04565-282044
சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.
சிவகங்கை மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த மற்றும் உதிரா நிலையில் உள்ள காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலம் விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் (24/08/2025) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் (21/08/2025) அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ₹1000/- முன் தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என சிவகங்கை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.