Sivagangai

News November 1, 2024

சிவகங்கையில் 113 வழக்குகள் பதிவு

image

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் வழியாகவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு அக்டோபர் 29, 30 தேதிகளில் அஞ்சலி செலுத்த சென்று திரும்பிய வாகனங்களில், சாலை விதிகளை மீறிய வாகனங்களின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News November 1, 2024

காரைக்குடி மாநகராட்சியில் ரூ. 77.11 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தற்போது ரூ. 77.11 கோடியில் நடைபெற்று வரும் 12 வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் எஸ். சித்ரா, மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News October 31, 2024

கீழவாணியங்குடியில் ஒருவர் கொலை

image

சிவகங்கை அருகே கீழவாணியங்குடியை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது மகன் மணிகண்டன் (37) என்பவரை இன்று மாலை கீழவாணியங்குடி ஊரணி அருகே மர்மநபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News October 31, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌.
SHARE IT!

News October 30, 2024

டிஎன்பிசி சிறப்பு வகுப்புகள்

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II மற்றும் தொகுதி II A  தேர்விற்கான முதன்மைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சி வகுப்பினை மாணாக்கர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்  என மாவட்ட ஆஷா அஜித்  தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

இடைக்காட்டூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா (68) பட்டா மாறுதலுக்கு ரூ.1500 லஞ்சம் வாங்கி கடந்த 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (அக்.29) கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தாவிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News October 30, 2024

சிவகங்கை நகராட்சியில் சர்வர் பிரச்னை

image

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 10 நாட்களுக்கும் மேல் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவிற்காக 100க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களில் 60 பிறப்பு சான்று, 30 திருத்த சான்று, ஒரு இறப்பு சான்று தொடர்பான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.

News October 30, 2024

தொழில் முனைவோர்களுக்கு ஊக்கவிப்பு முகாம்கள்

image

சிவகங்கை மாவட்ட தொழில் முனைவர்களுக்கு பயனுள்ள வகையில் வட்டார அளவிலான தொழில் ஊக்கவிப்பு முகாம்கள் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, நவ.6 திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும். மேலும், நவ.9 ஆம்தேதி 11.00 AM அளவில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.00 PM அளவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தகவல்.

News October 29, 2024

இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II மற்றும் தொகுதி II A –தேர்விற்கான முதன்மைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சி வகுப்பினை மாணாக்கர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!