India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில், வருகின்ற 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படைவீரர்கள். காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) கபீர் புரஸ்கார் விருதினை பெற (https://awards.tn.gov.in) வாயிலாக வருகின்ற 15.12.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(டிச.11) தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 13.12.2024 அன்று காலை 10.30 மணியளவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் விரைவில் மக்களுக்கு கிடைக்க உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் சிவகங்கை வட்டத்தில் டிச.18 அன்று நடைபெற உள்ளது. எனவே மக்கள் டிச.12 முதல் டிச.16 வரை சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற டிச.16ஆம் தேதியிலிருந்து 21 நாட்கள் தொடர்ச்சியாக, அனைத்து மாட்டினங்களுக்கும், 6ஆவது சுற்று கால் & வாய் காணை (கோமாரி தடுப்பூசி) செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. எனவே, இத்தடுப்பூசி முகாம்களை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்திடலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(டிச.10) தெரிவித்துள்ளார்
சிவகங்கை துணை இயக்குநர் குடும்ப நலப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் தற்காலிக பணியிடத்தினை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பம் 11.12.2024 முதல் 26.12.2024 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகிறது. http:/sivaganga.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
சிவகங்கை அருகே கல்குளம் விலக்கில் காவல் ஆய்வாளர் மணிகண்டன், சார்பு ஆய்வாளர் சவுந்திரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்றவரை விசாரித்தனர். டூவீலரை சோதனையிட்டதில் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது.வே.மிக்கேல்பட்டிணம் பாலாமணி மகன் ஊர்க்காவலன் 28, என்பதும் தெரிந்தது. நேற்றுபோலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட செய்தி தொடர்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிவகங்கையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (டிச.9) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 413 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் கோரிக்கைகளை ஆட்சியர் கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உள்ளிடோர் உடனிருந்தனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே பெருங்குடி மணிவண்ணன் மகன் ரக்சித் நெவீன் (16)சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்று கண்களை கட்டிக்கொண்டு 18 மீட்டர் துாரமுள்ள இலக்கில் அம்பை எய்து சாதனை படைத்து, சிங்கப்பூர் விருதையும் பெற்றுள்ளார்.அதே 18 மீட்டர் துார இலக்கை கண்களை மூடி வில்லில் இருந்து அம்பை எய்து சாதனை படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.