Sivagangai

News December 14, 2024

அழகப்பா பல்கலையில் 113 பேராசிரியர் பணியிடங்கள்

image

காரைக்குடி அழகப்பா பல்கலையில் 55 துறைகளின் கீழ் பேராசிரியர், இணை பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், சான்றிதழ் படிப்புகளை படித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலையில் 113 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

News December 14, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்

News December 13, 2024

சிவகங்கையில் ரேஷன் குறைதீர் கூட்டம் அறிவிப்பு 

image

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை(டிச.14) ரேஷன் குறைதீர் கூட்டம் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு மாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – சிவகங்கைக்கு பொருந்தாது

image

சிவகங்கை மாவட்டம் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் இன்று (டிச.12.) தெரிவித்துக் கொண்டதாவது; கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு இது பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

மக்கள் குறைதீர் முகாம் – சிவகங்கை ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் வரும் 14.12.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (டிச.12) தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

சிவகங்கைக்கு நாளை கனமழை – வானிலை மையம்

image

தென் தமிழக மாவட்டங்களில் நாளை (டிச.13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அவர்; சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு

image

அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வருகிற (டிச.14) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை காலை 10:00 மணி முதல் மனு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் இன்று(டிச.12) தெரிவித்துள்ளார்

News December 12, 2024

சிவகங்கையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பிட மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தகுந்தாற் போல் முன்னேற்பாடு செய்து கொள்ளவும்

News December 12, 2024

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை

image

சிவகங்கையில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு ராஜேந்திரன் என்கிற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று(டிச.12) குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது

error: Content is protected !!