Sivagangai

News December 23, 2024

குறைதீர் கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (டிச.23) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 407 மனுக்கள் பெறப்பட்டன.

News December 23, 2024

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு 

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27.12.2024 அன்று முற்பகல் 10 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (டிச.23) தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

ரயில்வே கேட்டில் சிக்கிய வாகனம்

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் தினமும் சென்று வருகிறது. நேற்று மண்டபத்தில் இருந்து புறப்பட்ட ரயில் கீழப்பசலை ரயில்வே கேட் அருகே வந்தபோது ஊழியர்கள் மூட முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் கேட்டில் சிக்கியது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு 40 நிமிடம் தாமதமாக சென்றது

News December 22, 2024

தென்னை சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

image

சிங்கம்புணரி தாலுகாவில் விவசாய வேலை தெரிந்தவர்கள் அனைவரும் வேலை உறுதித் திட்ட பணியில் சேர்ந்து விட்டதால் விவசாயப் பணிகளுக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தென்னை, தோட்ட பயிர் சார்ந்த அனைத்து விவசாய பணிகளுக்கும் வேலை உறுதித் திட்ட பணியாளர்களை முன்னுரிமை அடிப்படையில் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

News December 22, 2024

பிள்ளையார்பட்டி கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

image

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். புத்தாண்டு அன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மூலவர் தங்க கவசத்திலும், உற்சவர் கற்பகவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் காட்சியளிப்பார். இதற்காக மேற்கூரைகள், பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News December 22, 2024

சிவகங்கையில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் அரவிந்த் என்பவர் ரூ.30 லட்சம் பணத்தை எடுத்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் பெப்பர் ஸ்பிரே அடித்து இளைஞரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை வழிப்பறி செய்தனர். புகார் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

News December 21, 2024

ஆத்தங்குடி டைல்ஸ் பற்றிய வரலாறு தெரியுமா.?

image

ஆத்தங்குடி டைல்ஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்த கையால் செய்யப்பட்ட தரை ஓடுகளாகும். அவை உருவாக்கப்பட்ட இடம் ஆத்தங்குடி என்பதால் ஆத்தங்குடி டைல்ஸ் என அழைக்கப்படுகிறது.இது செட்டிநாடு பாரம்பரியத்தின் நம்ப முடியாத மற்றும் உன்னதமான வெளிப்பாட்டைச் சித்தரிக்கிறது. இந்த ஓடுகள் செட்டிநாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆத்தங்குடி டைல்ஸ் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசுபொருளானது.

News December 21, 2024

விவசாயத்திற்கு தண்ணீர் திறந்த கானூர் கண்மாய் இயக்குநர்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பச்சேரி கிராம விவாசாயிகள் ஆலோசனைப்படி பச்சேரி கிராம விவசாயிகள் பாசனத்திற்கு கானூர் கண்மாயின் 3-வது மடையான அத்திரி மடையை கானூர் கண்மாய் இயக்குநர் அழ.கணேசன் பார்வையிட்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பச்சேரி கிராம பாசன விவசாயிகள் அப்துல்ரகுமான் மற்றும் சுப்பையா உடன் இருந்தனர்.

News December 21, 2024

காரைக்குடி-சென்னை ரயில் இயக்க கோரிக்கை

image

காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்குடி வந்து சென்ற காரைக்குடி மயிலாடுதுறை தினசரி பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், காரைக்குடி மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிதாக ரயிலும், ராமேஸ்வரம் சென்னைக்கு பகல் நேரத்தில் இன்டர்சிட்டி ரயிலையும் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News December 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி

image

சிவகங்கை ரயில்வே கோட்ட அலுவலர் இன்று (டிச.20) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் சலுகை அட்டை வழங்குவதாகவும் இதற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தால் பரிசீலனைக்குப் பிறகு சலுகை அட்டை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!