India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கோஷ்டியூரில்சில தினங்களுக்கு முன்பு திருக்கோஷ்டியூர் திருப்பாற்கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இறந்த சிறுவர்களின் இல்லத்திற்கு சென்று தமிழக முதல்வர் நிவாரண நிதி ரூ.2 லட்சத்தில் இன்று(டிச.26) ஆறுதல் தெரிவித்தனர்.
பரமக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக திருப்புவனம் வரை அரசு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது.நேற்று காலை 9:30 மணிக்கு திருப்புவனத்தில் இருந்து கிளம்பிய பஸ், சற்று தூரம் சென்ற உடன் பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதையறிந்த ஓட்டுநர் கியர் மூலமாக வேகத்தை குறைத்து நடத்துனரின் முயற்சியால் பஸ்ஸின் டயருக்கு அடியில் போட்டு நிறுத்தி விபத்து தவிர்க்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் தங்கத் தகடு ஒட்டும் பணி நவ-14ல் துவங்கியது.துணை ஆணையர் ஒரு மாத மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் தங்கத் தகடு ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பணி பாதிக்காமலிருக்க மாற்றுப்பணியில் துணை ஆணையர் நியமிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
சிவகங்கை அருகேயுள்ள மேலவாணியங்குடி முருகேசன் மகன் வெங்கடேஷ். இவர் சிவகங்கையில் பூக்கடை வைத்திருந்தார். 19ம் தேதி இரவு கடையிலிருந்து டூவீலரில் வீட்டிற்க்கு சென்றார் அப்போது அவரை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டி கொன்றனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் அவரது முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரித்ததில் மதுரையை சேர்ந்த கூலிப்படை 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து பரமக்குடி, ராமநாதபுரம் செல்லும் சில தனியார் பேருந்துகள் திருப்பாச்சேத்தி,ராஜகம்பீரம் ஊருக்குள் செல்வதில்லை. இன்று காலை 11 மணிக்கு திருப்புவனத்தில் தனியார் பேருந்தில் ஏறிய 55 வயது பெண் ராஜகம்பீரம் இறங்க வேண்டும் என்றார். ராஜகம்பீரம் ஊருக்குள் செல்லாது யாரைக் கேட்டு ஏறினாய் என நடத்துனர் கோபத்துடன் கேட்டு திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில்10 ரூ டிக்கட் கொடுத்து இறக்கி விட்டார்.
காரைக்குடி மற்றும் ஊருணியைச் சோ்ந்தவா்கள் குணா (22) மற்றும் மணிகண்டன் (24). குணா மீது கஞ்சா கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மணிகண்டன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவிட்ட நிலையில், திருக்கோஷ்டியூா் போலீசார் அவர்களை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட செய்தியாளர்கள், செய்தித் துறையில் ஆர்வமுள்ள தனி நபர்கள் Way2News App-ல் செய்தி வெளியிட ஆர்வமா.? காளையார்கோவில் தாலுகா பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள், மழை, கோரிக்கை செய்திகள், சாலை சேதம், அரசு சம்பந்தப்பட்ட செய்திகளை Way2News App-ல் பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள்.. தொடர்புக்கு 9791338296.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (டிச.24) தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஒவ்வொரு முறையும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுவார். இந்நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2024ம் ஆண்டில் மட்டுமே 56 பேர் குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்கா மூலம் 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆட்டோ மொபைல் உதிரி உதிரி பாகங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் வரும்.
Sorry, no posts matched your criteria.