India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 23.01.2025 அன்று மானாமதுரை வட்டத்தில் நடைபெற உள்ளது. அதில் ஜன.08 முதல் ஜன.20 வரை மானாமதுரை வட்டத்திற்குட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துரை சேர்ந்த முத்துலட்சுமியும், அவரது மகன் கோபியும் இன்று டூவீலரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்துள்ளனர். புளியால் அருகே சிலேமேகநாடு என்ற இடத்தில் வரும்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் தாயும் மகனும் கீழே விழுந்ததில் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தேவகோட்டை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அகில இந்திய சைனிக் பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/- என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 13.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகர் 18வது வார்டுக்கு உட்பட்ட மாப்பிள்ளை துரை ஊரணியை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டனர். உடன் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம், சுகாதார அலுவலர் அப்துல் கலாம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் One Stop Centre-ல் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான Special Educator for Behavioural Therapy, Occupational Therapist மற்றும் Social Worker பணியிடங்களுக்கு 04.01.2025 to 20.01.2025 மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. http:/sivaganga.nic.in என்ற வலைதளத்தின் வேலைவாய்ப்புப் பிரிவிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில், திருவாடானை ஆண்டாள் ஊரணியை சேர்ந்த காளியம்மாள்(45) கர்ப்பப்பை பிரச்னை காரணமாக கடந்த அக்டோபரில் அட்மிட் ஆகியுள்ளார். இவருக்கு கர்ப்பப்பை ஆப்பரேஷன் செய்யப்பட்டபோது உள்ளே பஞ்சை வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது. சிகிச்சைக்கு பின் வயிற்று வலி ஏற்படவே பரிசோதனை செய்தபோது உள்ள பஞ்சு இருப்பது தெரிந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை GH-க்கு தினமும் 500-க்கும் மேல் நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், இருதயம், நரம்பியல் பிரிவுகளுக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து மாத்திரைகள் இல்லை என்றும், எக்கோ எடுப்பதற்கு மதுரைக்கு அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சிவகங்கை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தினால் தாட்கோ சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று(ஜன.2) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அரிசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.