India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பிடாவூர் அரசுப் பள்ளியில் 6 மாதமாக பெண் ஆசிரியை ஒருவர் சாதி ரீதியாகவும், மற்ற பிற காரணங்களை கூறியும் மோதலில் ஈடுபடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மேலாண் குழு தலைவர் கீதா, முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட 17 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 17 இரு சக்கர வாகனங்கள் ஏலம் பிப்.18 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பணி புரியும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் 04575-240521 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணாக்கர்கள், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்று கழக நிர்வாகிகளை சந்திக்க வருகை புரிந்த மா.செயலாளர் ஜோசப் தங்கராஜ்க்கு திருப்புத்தூர் ஒன்றிய நகர கட்சியின் சார்பில் இன்று (பிப்.04) வரவேற்பு செலுத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் கார் எதிர்பாராத விதமாக டிராபிக்கில் மாட்டிக் சிக்கிக் கொண்டது. உடனே டிராபிக் போலீசார் கூட்டத்தை சரி செய்து அமைச்சரை அனுப்பி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற புத்தக திருவிழா, இந்தாண்டும் 2025ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களின் பல்வேறு தலைப்புகளிலுமான இலட்சக்கணக்கிலான புத்தகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நடைபெற உள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (பிப்.3) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால், 18004252650 தகவல் தெரிவிக்கலாம்
மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 04 தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை ஆன்லைனில் கூகுள் படிவத்தை தயார் செய்து அனுப்பி உள்ளது.இந்த படிவத்தை நிரப்பி அனுப்புமாறு கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.இந்த கூகுள் படிவம் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து whatsapp குரூப்புகளுக்கும் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்
ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. கடந்த ஜன., 27ல் 2 ஆண், பெண் ஆசிரியர்கள் அறைகளில் இருந்த நோட்டு, புத்தகங்கள்,பொருட்கள் மற்றும் ஆவணங்களை சூறையாடிய சமூக விரோதிகள் அறையில் உள்ள டேபிள் உள்பக்கத்திலும், அறையிலும் மலம் கழித்து சென்றுள்ளனர்
இதுபோன்ற அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.