Sivagangai

News January 23, 2025

சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

image

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே பி.அழகாபுரி கிராமத்தில் இரவு வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் (23) என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த வடக்கு இளையாத்தங்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) என்பவரை திருமயம் போலீசார் கைது செய்து கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 23, 2025

மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் 

image

தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூர் ஊராட்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கூடுதல் கட்டிடமாக மருத்துவமனை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உதவி செயற்பொறியாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News January 23, 2025

வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதோர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து Voter Helpline என்ற செயலியின் வாயிலாகவோ அல்லது https://www.nvsp.in, https://www.voters.eci.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஜன.23) தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

தேசிய வாக்காளர் தினத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

image

தேசிய வாக்காளர் தினம் வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31ஆம் தேதி காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு, செலவு திட்டம் குறித்து தெரிந்து கொள்ள பொது மக்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஜன.23) தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

உங்களைத் தேடி உங்கள் திட்ட முகாம் தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் நாளை (23.01.2025) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற ( 29.01.2025)புதன்கிழமை அன்று மானாமதுரை அனுசுயா மஹாலில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆச ஆஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

மாணவிகள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய முதல்வர்

image

சிவகங்கை நகராட்சி மன்னர் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் கல்லூரி மாணவிகள் புனித ஜஸ்டின் கல்லூரி அருகே பேருந்து நின்று செல்ல வேண்டுமென மாணவிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அடுத்த சில மணி நேரங்களில் பபேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News January 22, 2025

53,039 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2025) சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், 53,039 பயனாளிகளுக்கு ரூ.161 கோடியே 11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் விழா பேருரை ஆற்றினார்.. இவ்விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

பதவி உயர்வு லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

image

சிவகங்கையில் 2011ல் வேளாண் இணை இயக்குனராக பணியாற்றிய தங்கசாமி பாண்டியன் (71) தனக்கு கீழ் பணியாற்றிய கவிதா மற்றும் அவரது கணவர் மகேஷ் ஆகியோருக்கு பணிக்கு வராதது மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது என்ற குற்றச்சாட்டின் கீழ் மெமோ கொடுத்து பதவி உயர்வு கொடுக்க லஞ்சம் கேட்டார்.இதையடுத்து மகேஷிடமிருந்து 10,000 ரூபாயை தங்கசாமி பாண்டியன் லஞ்சம் பெற்ற போது போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

error: Content is protected !!