Sivagangai

News January 26, 2025

384 அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கிய ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 17 பயனாளிகளுக்கு ரூ.30.83 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 60 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கமும், சிறப்பாக பணிபுரிந்த 45 காவலர்களுக்கும் அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 384 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்

News January 25, 2025

சிவகங்கை மக்களே உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) சிவகங்கை மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

News January 25, 2025

விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி,நெல் அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்துள்ள உரிமையாளர்களின் விவரபங்கள் மற்றும் தொலைபேசி எண்களை நேரடியாக தொடர்பு கொண்டு, இடைத்தரகர்கள் இன்றி அறுவடை இயந்திரங்களை பெற்று பயன்பெறலாம். விவசாயிகள் கூடுதலாக வாடகை வசூல் செய்யப்படுவது தொடர்பான புகார்களை,வருவாய் கோட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

அரசு பள்ளி மாணவன் இறப்புக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் சக்தி சோமியா (14) என்ற 9-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வருந்தத்தக்கது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அமுமுக நிறுவனர் தினகரன் இன்று கண்டன குரல் எழுப்பி உள்ளார்.

News January 25, 2025

பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

image

சாக்கோட்டை பொய்யாவயல் அரசுப்பள்ளியில் 9ம்வகுப்பு படித்த மாணவர் சக்தி சோமையா நேற்று வகுப்பறையில் கம்ப்யூட்டர் இணைப்பு வயரை பிளக்கில் மாட்டிய போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்துள்ளார். இன்று தற்போது, மாணவருக்கு உடற்கூராய்வு செய்ய மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளி தலைமையாசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 25, 2025

குழந்தை தொழிலாளர் குறித்து புகார் அளிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணைய முகவரியிலோ ,04575-240521, Child Help line 1098 தொலைபேசி எண்களின் வாயிலாகவோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் காரைக்குடி மாணவிகள்

image

இந்தியா நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும் சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் உள்ள 9ஆவது பட்டாலியனைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவி ஜீவகப்பிரியா,நிர்மலா தேவி தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர்.

News January 24, 2025

காங்கிரஸ் கட்சி நிர்வாகி படுகொலை?

image

காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பாண்டி (45) காங்கிரஸ் கட்சி வார்டு பொறுப்பில் நிர்வாகியாக உள்ளார். இன்று அதலை கண்மாய் பகுதியில் உள்ள அவரது வயக்காட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். அப்பகுதியில் உறவினர்கள் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் வெட்டுப்பட்டு பாதி உடல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 24, 2025

சாக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவர் பலி!

image

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் சக்தி சோமையா என்பவர் இன்று (ஜனவரி 24) பள்ளியில் கணினியை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 24, 2025

போதை பொருட்கள் இல்லாத காரைக்குடியாக மாற்றுவோம்

image

காரைக்குடியில் பள்ளிகளின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளதாகவும், கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்று காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!