Sivagangai

News February 3, 2025

கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால், 18004252650 தகவல் தெரிவிக்கலாம்
மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 2, 2025

பெயரை பதிவு செய்ய கூகுள் லிங்க்.பாஜக ஏற்பாடு.

image

வரும் பிப்ரவரி 04 தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை ஆன்லைனில் கூகுள் படிவத்தை தயார் செய்து அனுப்பி உள்ளது.இந்த படிவத்தை நிரப்பி அனுப்புமாறு கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.இந்த கூகுள் படிவம் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து whatsapp குரூப்புகளுக்கும் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

News February 2, 2025

அரசு மேல்நிலைப் பள்ளியில் அவலம்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்
ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. கடந்த ஜன., 27ல் 2 ஆண், பெண் ஆசிரியர்கள் அறைகளில் இருந்த நோட்டு, புத்தகங்கள்,பொருட்கள் மற்றும் ஆவணங்களை சூறையாடிய சமூக விரோதிகள் அறையில் உள்ள டேபிள் உள்பக்கத்திலும், அறையிலும் மலம் கழித்து சென்றுள்ளனர்
இதுபோன்ற அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

News February 1, 2025

சிவகங்கை தெற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் நியமனம்

image

சிவகங்கை தெற்கு மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியல் இன்று (பிப்.01) வெளியாகியுள்ளது. மாவட்ட கழகச் செயலாளராக முத்துபாரதி, இணை செயலாளராக காலீஸ்வரன், பொருளாளராக கண்ணதாசன், துணைச் செயலாளர்களாக ராஜ்குமார், செல்வி, செயற்குழு உறுப்பினர்களாக பிரின்சி, முத்துச்செல்வி, மகேஸ்வரி, செல்வமினால், சந்திரசேகர், தாமரைப்பாண்டி, முத்துக்குமார், நல்லமணி, நாகர்ஜுனன், ராமு நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 1, 2025

சிவகங்கை மக்களே: ரூ.500 வரை சன்மானம் பெற வாய்ப்பு

image

சிவகங்கை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9791338296 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசெஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து)<<>> உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்*

News February 1, 2025

சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

image

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலை பகுதியில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சண்முகநாதன் என்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வால் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண

News February 1, 2025

ஆன்லைன் மூலம் நிலம் அளப்பு; புதிய வசதி

image

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் நில உரிமையாளர் தனது நிலங்களை அளவீடு செய்ய https://tamilnilan.tn.gov.in/citizen என்ற ஆன்லைன்ல் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரரிடம் பதிவு செய்யப்பட்டு செல்போன் எண் வாயிலாக தெரிவிக்கப்படும். மனுதாரர், நில அளவர் கையொப்பமிட்ட வரைபடத்தை https;//eservices.tn.gov.in என்ற ஆன்லைனில் பெற புதிய வசதி

News February 1, 2025

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவி முதலிடம்

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவி மகிழினி மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இம் மாணவிக்கு துணை முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி சாலை, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்

image

கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமராக்கியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுரையின்படி மூதாட்டிக்கு UDID அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால் வழங்குவதற்கு ஏதுவாக அளவீடு பணிகள் இன்று (ஜன.31) மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!