India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் உழவர் பயிற்சி மையத்தில் நாளை ( 10/3/2025) பெண்களுக்கு என சிறப்பு அழகுக்கலை செயல்முறை இலவச பயிற்சி நடைபெறுகிறது. கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .அரை நாள் பயிற்சி என்பதால் இந்த 9488575716,9578499665 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் .
சிவகங்கை மாவட்டதில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது . மானியம் உள்ள KCC விவசாய நகை கடன் ,விவசாயகடன், மானியம் இல்லாத தங்க நகைகடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது .இதனை பெற விவசாயிகள் பட்டா, சிட்டா நிலவரி செலுத்திய ரசீது, ஆகியவை கொண்டு வங்கி கிளையை அணுக வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவகோட்டையில் நேற்று காலை தினசரி காய்கறி மார்க்கெட், அதன் சுற்று பகுதியில் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது.மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், வாகனங்களில் சென்றவர்களை கூட விடாமல் விரட்டிகடித்தது. அ.திமு.க. கவுன்சிலர் முத்தழகு 55, வினோத்குமார் 43, நிகேதன் 23, பகுருதீன் 60, வீரசேகரன் 43, மற்றும் விஜயா உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச்.8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறையில் அமைய உள்ளதாக தெரிவித்தார்.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் தெருவில் தனி நபர் பொருள்கள் வைக்கும் கிடங்குக்குப் பெற்ற அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, அந்த இடத்தில் திருமண மண்டபத்தைக் கட்டியுள்ளார். இதனை எதிர்த்து திருப்புவனத்தை சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு நேற்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. னுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மின் வாரியத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் விண்ணப்ப நகல், புகைப்படங்கள், வங்கி கணக்கு புத்தகம், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, கல்விசான்றிதழ், எடுத்து வர வேண்டும்.
சிவகங்கையில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
மாதவரம்பட்டி விவசாயி அழகு. மனைவி இந்திராணி 48. கணவரை பிரிந்து வாழ்கிறார். சொத்தை பிரித்து தருமாறு அழகுவிடம் இந்திராணி கேட்டார். அழகு மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் மீட்டு, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்ற கலெக்டர், திருப்புத்துார் தாசில்தாரின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா பணிக்கான வேலை காலியிடங்கள் உள்ளது. மார்ச் 21,22-ம் தேதி நேர்காணல் நடைபெற இருக்கின்றது. தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பணிக்கு சேரலாம். ஊதியம் மாதம் ரூ.18,750. இதன் முழு விவரம் பள்ளியின் <
Sorry, no posts matched your criteria.