Sivagangai

News March 8, 2025

சிவகங்கையில் தோழி விடுதிகள்; ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச்.8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறையில் அமைய உள்ளதாக தெரிவித்தார்.

News March 8, 2025

ஆட்சியர், மின்வாரி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

image

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் தெருவில் தனி நபர் பொருள்கள் வைக்கும் கிடங்குக்குப் பெற்ற அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, அந்த இடத்தில் திருமண மண்டபத்தைக் கட்டியுள்ளார். இதனை எதிர்த்து திருப்புவனத்தை சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு நேற்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. னுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மின் வாரியத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

News March 8, 2025

சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் விண்ணப்ப நகல், புகைப்படங்கள், வங்கி கணக்கு புத்தகம், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, கல்விசான்றிதழ், எடுத்து வர வேண்டும்.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

சிவகங்கையில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.

News March 8, 2025

கலெக்டர் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

image

மாதவரம்பட்டி விவசாயி அழகு. மனைவி இந்திராணி 48. கணவரை பிரிந்து வாழ்கிறார். சொத்தை பிரித்து தருமாறு அழகுவிடம் இந்திராணி கேட்டார். அழகு மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் மீட்டு, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்ற கலெக்டர், திருப்புத்துார் தாசில்தாரின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.

News March 7, 2025

சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை

image

சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா பணிக்கான வேலை காலியிடங்கள் உள்ளது. மார்ச் 21,22-ம் தேதி நேர்காணல் நடைபெற இருக்கின்றது. தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பணிக்கு சேரலாம். ஊதியம் மாதம் ரூ.18,750. இதன் முழு விவரம் பள்ளியின் <>வலைத்தளத்தில் <<>>உள்ளது. ஆசிரியராக துடிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

News March 6, 2025

சிவகங்கை நகராட்சி ஏலம் ஒத்திவைப்பு

image

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தையில் இருந்த கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பிப்.6,18 ஆகிய 2 தேதிகளில் ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஏலத்தில் வியபாரிகள் பங்கேற்கவில்லை என்பதால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

News March 6, 2025

உலக சாதனை படைத்த இரட்டையர்கள்

image

காரைக்குடி அருகேயுள்ள தனியார் பள்ளியில்  இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையர்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா். உலகச் சாதனை சான்றிதழ்கள், சிறப்பு பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் எஸ்.பி. குமரேசன், துணைத் தலைவர் கே. அருண்குமாா், முதல்வா் உஷாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 6, 2025

ஆந்திராவைச் சேர்ந்த 60 வயது கொத்தடிமை மீட்கப்பட்டார்

image

சிவகங்கையில் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஆந்திரவைச் சேர்ந்த அப்பாராவ் தேனீர் அருந்துவதற்காக ரயிலை விட்டுக் கீழே இறங்கிய போது ரயில் சென்றது. ரயிலை தவறவிட்ட அப்பாராவுக்கு உதவ முன்வந்த ஒருவர்,அவரை 20 ஆண்டாக ஆட்டு மந்தையை மேய்ப்பவராக மாற்றிவிட்டார்.தமிழக தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் காரணமாக கொத்தடிமை தொழிலிலிருந்து அப்பாராவ் மீட்கப்பட்டார்.

News March 6, 2025

சிவகங்கை அருகே தூக்கிட்ட பெண் பிணம்

image

சிவகங்கை, நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் எதிரே உள்ள காட்டு பகுதியில் 40 வயது மதிக்கதக்க அடையளாளம் தெரியாத பெண் ஒருவர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்த நிலையில் இருந்தார். நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டரை வர வழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பெண் யார் அங்கு வந்து எப்படி இறந்தார் என விசாரிகின்றனர்.

error: Content is protected !!