Sivagangai

News March 25, 2025

விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சிவகங்கை மாவட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு வருகின்ற 06.04.2025 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

மார்ச்.28ல் வேலை வாய்ப்பு முகாம்

image

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச்.28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

ஆரம்ப சுகாதார பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்டம் செஞ்சை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கணேசபுரம் நகர் நலவாழ்வு மையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்,சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடம் ஒன்று நிரப்பப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ளவர்கள் https:// sivaganga.nic.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்ரல்.1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவிக்க அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 25, 2025

காரைக்குடி: போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காரைக்குடி கோட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு 185 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியானவர்கள் மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து உங்க நண்பர்களுக்கு Share செய்யுங்கள். 

News March 25, 2025

ரயில்வே அமைச்சருக்கு சிவகங்கை எம்.பி கடிதம்

image

சிவகங்கை நாடாளுமன்ற எம்.பி.,கார்த்திக் சிதம்பரம் தலையிட்டு பேசியதன் தொடர்ச்சியாக, சிவகங்கை தொகுதியான சிவகங்கை மாவட்டம் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்திய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

News March 25, 2025

சிவகங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஐசிடிசி கவுன்சிலர் தலா ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடம் எக்காரணம் கொண்டும் நிரந்தரம் செய்யப்படாது. தகுதியுள்ளோர்<> இந்த<<>> இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

சாலையில் கிடந்த அழகான பெண் குழந்தை

image

தேவகோட்டை நகைக்கடை பஜாரில் நேற்று (ஞாயிறு) இரவு 10 மணிக்கு மேல் பிறந்து ஒருவாரம் ஆன பெண் குழந்தை சாலையோரத்தில் கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் சாலையில் கிடந்த குழந்தையை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்களிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பெண் குழந்தை குறித்து தேவகோட்டை டவுன் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது.

News March 24, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28.03.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியர் அறிவுரை

image

சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள்,முதியோர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!