India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடம் உலகளவில் இசைக்கலைஞர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து தயாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தில் அங்ககச்சான்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து பங்கேற்பாளர் உறுதி அளிப்பு திட்டத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தரச்சான்று பெறலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேற்று தளக்காவூர் புனித துாய ஜெபமாலை அன்னை திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது 14 மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் சீறி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து குறிப்பிட்ட நேரத்தில் அடக்கினர் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் ரொக்க பரிசை மற்றும் நினைவு பரிசுப் பொருட்கள் வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மே.21ஆம் தேதி நகை வியாபாரியை வழிமறித்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.
திருப்புவனம் தாலுகா உட்பட்டூர், பூவந்தி, மணலூர் ஆகிய பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாணவரணி பொருளாளர் மணிமாறன் கண்டன சுவரொட்டிகளை நேற்று ஒட்டியுள்ளார். அதில் புரட்சித்தலைவி அம்மாவை அவதூறாக பேசி வரும் அரைவேக்காடு அண்ணாமலையை கண்டிக்கிறோம் எனவும் அண்ணாமலை தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சுவரொட்டியில் பிரசுகரிக்கப்பட்டுள்ளது .
திருச்சியை சேர்ந்த முத்துக்குமாரும் காரைக்குடியை சேர்ந்த சுபஸ்ரீயும் காதலித்து வந்தனர். வேலையின் நிமித்தமாக முத்துக்குமார் காரைக்குடியில் தங்கி இருந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலை அறிந்து சுபஸ்ரீயும் தான் படிக்கும் புதுக்கோட்டை அருகே உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமார் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் மேற்பார்வையில் திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் திருப்பாச்சேத்தி அருகே 4 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த வழக்கில் தாய், தந்தை, பாட்டி ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணி வேலுநாச்சியார் 18 நூற்றாண்டில், சிவகங்கையின் ராணியாகவும், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் போராட்ட வீராங்கனையாகவும் இருந்தவர். மேலும் இவர் பல மொழிகளில் புலமை வாய்ந்தும் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக உருது மொழியில் ஹைதர் அலியிடம் பேசி, அவரின் உதவியுடன் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்றார். 1746இல் பிறந்த வேலுநாச்சியார் 1796 இல் இறந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் மகளிர் விடுதிகள், இல்லங்கள், காப்பகங்கள் நடத்துபவர்கள் அனைவரும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014ன்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். http://tnswp.comஎன்ற இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று(மே.26) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.