India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 7 காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் மதி உட்பட 7 காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் சிறந்த பணி செய்ததற்கு பாராட்டு சான்றிதழை வழங்கி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை சிவகங்கை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்த விருதுக்கான விண்ணப்பம், https://awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஜூலை 11, மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
இந்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் ஆணையரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா வருகின்ற 15.07.2024 அன்று சிவகங்கை-முத்துப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்த நபர்களுக்கு “சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது 2024” வழங்கப்படவுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய நபர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தில், இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இத்தேர்விற்கு ஜூலை 28ம் தேதிக்குள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜுலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற ஜூலை 13 அன்று காலை 10.00 -1.00 மணி வரை சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியில் இருந்து முகவரி அட்டை மற்றும் தெர்மல் பேப்பர் ரோல் ஆகியவற்றை அகற்றும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் இன்று(ஜூலை 6) நடைபெற்றது.
சுதந்திர தின விழாவில் ஏதாவது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கு “கல்பனா சாவ்லா விருது 2024” முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் இவ்விருதிணை பெற https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.