India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் தமிழ் வளர்ச்சிக்காக ஈடுபடும் ஆர்வலர்களுக்கு “தமிழ்செம்மல்” விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆக.9 க்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 2024 – 25 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கட்டுமானம், உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள “நமக்கு நாமே” திட்டம் மூலம் ரூ.100 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கு அறக்கட்டளை, தனியார் நிறுவனம்,பொதுமக்களிடமிருந்து தொகை வரவேற்கப்படுகிறது.தங்கள் பகுதியில் அரசு பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயரில் காசோலையாக வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பிராணிகள் வதை தடுப்புச் சங்க அமைப்பு சாரா செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்.ராமசந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் , பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறவுள்ளது. மேலும் பயிற்சிகாலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். எனவே சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ”நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென, அரசு பங்களிப்புடன் பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பொதுமக்கள் பங்களிப்புத் தொகை வரவேற்கப்படுகிறது. இதை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயரில் காசோலையாகவோ,வங்கி வரைவோலையாகவோ வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும், பிரதம மந்திரி பசு கிசான் திட்டத்தில் நிர்வாக பரப்பளவை பொருத்து ரூ.56 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்தில் 2 பசு மாடுகள், 1 பைசா வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டம், பழத்தோட்டங்களில் ஊடுபயிர் முறையில் தீவன பயிர்கள் சாகுபடியை பெருக்க கால்நடை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் ஊக்கத்தொகை பெறுவதற்கு, அந்தந்த பகுதிக்குட்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.