India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
மானாமதுரை அருகே உள்ள இ புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முனியாண்டி 40 இவர் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்துார் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.திருப்பாச்சேத்தியில் இருந்து வி.புதுக்குளம் கிராமத்திற்கு மதுரை, ராமேஸ்வரம் 4 வழி சாலையில் அன்னியேந்தல் அருகே டூவீலரில் சென்றபோது மற்றொரு டூவீலர் மோதியதில் காயமடைந்த முனியாண்டி பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரத்தில் மானாமதுரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பயன்படாத சமுதாய கிணற்றுக்குள் உரிமையாளர் பெயர் தெரியாத சுமார் ஐந்து வயது மதிப்புள்ள பசுமாடு ஒன்று கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் போடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொது வெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும், மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கண்டித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம்: அஜித்குமார் காவல் மரணம் வழக்குடன் அவர் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமித்து விசாரணையை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என (ஜூலை-08) இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கஸ்டடி (lockup )-ல் உயிரிழந்த வழக்கில்
நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று (ஜூலை-08) சமர்பித்த அறிக்கையின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதியை, இன்று (ஜூன்-08) சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து ஆறுதல் கூறினார். சின்னத் திருட்டுக்கு தனிப்படை விசாரிக்க அவசியம் என்ன? யார் தனிப்படையை அனுப்பியது என்பதை சிபிஐ விரைவில் விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பாத பராமரிப்பு மருத்துவ சிகிச்சை மையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காரைக்குடி மணி எம்எல்ஏ எஸ்.மாங்குடி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.