India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (GENERAL HELPER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்குள் படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்த நபரைத் தாக்கியதாக சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கவி என்ற புகழேந்தியை போலீஸாா் கைது செய்தனா். வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா். இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். தொடந்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
வணிகர் ஒருவர் வணிகம் முடித்துவிட்டு வரும் போது முத்துமாரி என்ற ஒரு குழந்தை அழுதபடி நின்று கொண்டிருந்தது. அந்த குழந்தையை நிற்கச் சொல்லிவிட்டு அவர் குளித்து வருவதற்குள் குழந்தை மாயமானது. அன்றிரவு அந்த வணிகர் கனவில் வந்த அந்த குழந்தை, தனக்கு கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் தருவேன் என்று கூறி மறைந்தது. அதன்படி, அந்த வணிகர் கோயில் எழுப்பினார். அதுதான் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்.
தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் வீட்டுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் பிரதி வாரந்தோறும் புதன்கிழமை அன்று சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சங்கரபதி கோட்டை 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு மருது பாண்டியர்களின் போர் பயிற்சி பாசறையாகவும், புகலிடமாகவும் இருந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டம் அவராவதி புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். இக்கோட்டை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியுள்ள பதிகுதியில் காட்டு மான்கள் நிறைய காணப்படுகின்றன.
சிவகங்கை வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தலாம். இது தவிர <
கோடையில் மம்ப்ஸ் என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் சிவகங்கையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். மம்ப்ஸ் என்ற வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காது மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.சிவகங்கையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்த குழந்தைகள் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (12.04.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாநில கட்டுப்பாட்டு அறை 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, காவல் கட்டுப்பாட்டு அறை 100, விபத்து உதவி எண் 108, விபத்து அவசர வாகன உதவி 102, குழந்தைகள் பாதுகாப்பு 1098, பேரிடர் கால உதவி 1077, தீ தடுப்பு, பாதுகாப்பு 101 , பாலியல் துன்புறுத்தல் உதவி எண் 1091, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04575 – 240391,240392,240393, வாட்ஸ்ஆப் எண் 8903331077 மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
Sorry, no posts matched your criteria.