India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசீரகாபாடி, மதுரையான் காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி சின்னத்தாயி (88). இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் சின்னதாயி வெளியே வராததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்த பொழுது வீட்டில் ரத்த காயத்துடன் சின்னத்தாயி இறந்து கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்ட போலீசார் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில்,”தொலைதூர அல்லது இரவு நேர பயணங்களின் போது, போதுமான அளவு ஓய்வுக்கு பின் பயணததை மேற்கொள்ளுங்கள். அசதியில் வாகனத்தை இயக்கி ஆபத்திற்கு ஆளாக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 27-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி சந்தையில் இன்று (ஜன.27) மதியம் மது அருந்திவிட்டு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 4 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சாலையோரம் இருந்த கடைகள் சேதமடைந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் விவரங்களை மறைத்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூர், மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அதிகாரிகள் நேற்று (ஜன.26) நடத்திய ஆய்வில் இயங்கிய 34 கடைகள் உள்பட் 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
சேலத்தில் நேற்று வைரமுத்து பேசுகையில், “சேலத்தில் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பதை தமிழ்நாட்டு வரலாறு மறந்து விடக்கூடாது. கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேலத்தின் காற்றை சுவாசித்து, சேலத்தின் தண்ணீரை குடித்து, சேலத்தின் சோற்றை உண்டு தான் தங்கள் கனவுகளையும், தகுதிகளையும், ஆற்றலையும், லட்சியங்களையும் வளர்த்துக் கொண்டார்கள். இது லட்சிய பூமி என்றார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் காதலுக்குரிய பூமி சேலம், உழைப்பாளிகளின் பூமி, சேலம் உருக்காலையின் பூமி; ஒரு பக்கம் கனி, இன்னொரு பக்கம் கனிமம், கனி கொண்ட ஊரும், சேலம் தான். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற கலைக்கூடத்தை நிறுவி கலை கொண்ட ஊரும் சேலம் தான்” என பேசினார்.
ஹசேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜன. 26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.