India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் செப்.15 மாலை 05.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (11.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலத்தில் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து விதமான குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, நேற்று வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1,01,726 மனுக்கள் குவிந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்.12- ஆம் தேதி அன்று மட்டும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (66617) முற்றிலும் ரத்துச் செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (16843) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்.12- ல் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்; செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்லும். இந்த ரயில்கள் ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படமாட்டாது என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<
Sorry, no posts matched your criteria.