India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று (ஏப்.23) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் மூன்றாவது துணை குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு அசாம் மாநில அரசு சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்த விவசாயியின் மகன் யுவராசு (16).பிளஸ் 1 பொதுத்தேர்வு முடித்துள்ள நிலையில் யுவராசு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை தந்தை செல்வம் கண்டித்துள்ளார்.தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுவராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரணை
சேலம், வட்டார மருத்துவ அலுவலர்களின் எண்கள் கன்னங்குறிச்சி-9487427742, இளம்பிள்ளை-9842061813, காடையாம்பட்டி-9994540962, சரக்கபிள்ளையூர்-8903522927, தாரமங்கலம்-9486765761, கொளத்தூர்-9442921044, மேச்சேரி-9443828077, நங்கவள்ளி-9487478134, சித்தூர்-9788199591, மகுடஞ்சாவடி-9443499255 உங்கள் பகுதியில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,001 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9,774 பிரசவங்கள் என மொத்தம் 14,775 பிரசவங்கள் நடைபெற்று உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் பிரசவம் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ரூபாய் 17.25 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏப். 25 முதல் மே 15 வரை தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு இலவச பயிற்ச்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் ஏப். 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பான இயக்கம், பஸ் பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதனால் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற பெயரை சேலம் கோட்டம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.