India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
சித்திரை அமாவாசையை முன்னிட்டு, சேலம், தருமபுரி, மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு வரும் ஏப்.27- ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும், சித்தர்கோயிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் வகைகள் விற்பனை கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், ” இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் மே 11- ஆம் தேதி வரை <
சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இன்று (ஏப்.24) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மூன்றாவது துணைக்குழு, ஷில்லாங்கிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களின் அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ஆர்.ஆர் திருமணமஹாலில் இயங்கி வரும், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கறவை மாடு வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 31 நாட்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சியில் உபகரணங்கள், சீருடை, தேநீர், மதிய உணவுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். நேரில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 28 ஆகும்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை போக்குவரத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெற அறிவுரை.
சேலம் கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ஏப்.26, 29 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். வண்டி எண்: 16811 மயிலாடுதுறை-சேலம் மெமு எக்ஸபிரஸ் ஏப்.26, 29-ந் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து து புறப்பட்டு கரூர் மாயனூர் வரை மட்டும் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.