India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் சனிக்கிழமை தோறும் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 7,782 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 3,540ஆண்களும் 3,540 பெண்கள் என மொத்தம் 7,782 பயனடைந்துள்ளனர். 4580 பிஜி, 666 எக்ஸ்ரே, 863 அல்ட்ரா ஸ்கேன், செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைப்பவர்களுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு கடை ஏற்கனவே வைத்திருந்தவர்கள் புதிதாக வைக்க விரும்புவர்கள் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், IFHRMS இணையதளம் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், விலங்குகள் பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் இனப்பெருக்கம், பால் சார்ந்த வணிகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட, ‘பொருளாதார மேம்பாட்டை நோக்கி, பால் பண்ணை சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு https://candidate.tnskill.tn.gov.in/skill-wallet/course/4377 என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்; பயிற்சி வகுப்புகள், சேலத்தில் 21 நாட்கள் நடைபெறுகிறது.SHARE பண்ணுங்க

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.விண்ணபிக்க <

சேலம் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <

சேலம் சென்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ரோகித், அஜய் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கால்பந்து அணியில் இடம் பிடித்து ஸ்ரீ நகரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவுச் செய்துள்ள தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சஙகீதா அழைப்பு விடுத்துள்ளார். கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் இலவச மதிய உணவு மற்றும் பயிற்சி சான்றிதழ் மற்றும் ஒரு நாளைக்கு ரூபாய் 800 வீதம் மொத்தம் ரூபாய் 5,600 வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலூரைச் சேர்ந்த சாந்தி (50) என்ற பெண் உயிரிழந்தார். சிறுவாச்சூரிலிருந்து தலைவாசல் நோக்கி ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் சென்றபோது, பட்டுத்துறை அருகே கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதன் பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்வோர், ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புவோர் எனப் பலருக்கும் அவல் சுண்டல் ஒரு வரப்பிரசாதமான உணவாக உள்ளது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வெறும் 10 ரூபாயில் உங்கள் காலை உணவை முடித்திவிடலாம். சேலம் என்றால் மாம்பழம்,தட்டுவடை செட் மட்டும் அல்லாது அவல் சுண்டலும் போமஸ்தான் என்றால் மிகையாகது.SHARE
Sorry, no posts matched your criteria.