India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் ரயில்வேத் துறையின் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முறையான ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 30,007 பேருக்கு ரூபாய் 1.98 கோடி அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஓமலூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது55). தொழிலாளி. இவர் மது போதையில் 5 – வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு – செய்து முதியவர் செல்வத்தை கைது செய்தனர்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 6 இரவு அதிகாரிகள் விவரம்.
பெங்களூரு விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் வரும் பிப்.14 வரை நடக்கிறது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் பயணியர் விமானங்களும் வரும் பிப்.14 வரை விமான சேவையை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கொச்சின் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட கண்காணிப்பு அமைச்சகத்தில் Young Professional பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.இதற்கு 50 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <
சேலம் சீலநாயக்கன்பட்டி மூணாம்கரடு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், நேற்று தனது நண்பன் சுப்பிரமணி தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையில் இருந்த மது பாட்டிலால் தன்னை தலையில் அடித்து மண்டையை உடைத்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தலைவாசல் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு 2) காலை 10:30 மணி மத்திய அரசின் புதிய சட்டம் மசோதா கலை திரும்ப பெற வலியுறுத்தி சிஏடி ஆர்ப்பாட்டம் 5 ரோடு 3) காலை 10 மணிபெரியார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் குறித்த தேசிய கருத்து அரங்கம் 4) காலை 10 மணி கைத்தறி கழகப் பயிற்சி மையம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்
சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக்கோட்டை ஊராட்சிக்கு ஊராட்சி சேவை மையம் அருகிலும்,சிறுவாச்சூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகிலும்,தலைவாசல் ஊராட்சிக்கு நத்தக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மணிவிழுந்தான் வடக்கு புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், காமக்காபாளையம் ஊராட்சி சேவை மையம் அருகிலும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்கள் நாளை (பிப்.06) நடைபெறவுள்ளதாக அறிவிப்பு.
“விருதுநகர் சின்னவாடியூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை முறையான ஆய்வு மேற்கொள்ளுமாறும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”- இ.பி.எஸ்.!
சேலம் மாநகரத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட சேலம் டவுன் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம் பட்டி, சூரமங்கலம்சரகம் பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்
Sorry, no posts matched your criteria.