India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்களில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.271 கோடியில் மதிப்பீட்டில் நடை மேம்பாலம், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.3) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி 3) இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
எடப்பாடி அருகே கணவன் உயிரோடு இருக்கும் போதே சொத்திற்காக ஆசைப்பட்ட மனைவி, கணவர் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் போலியாக பெற்று, வாரிசு சான்றிதழ் வாங்க எடப்பாடி வருவாய்த்துறையிடம் மனு அளித்த போது, வருவாய்த்துறை விசாரணையில் கணவர் விஜயகுமார் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மனு அளித்த மனைவியை கையும், களவுமாகப் பிடித்து, எடப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சேலம் வழியாக இயக்கப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய ரயில்கள் நாளை (பிப்.04) வழக்கமான பாதையில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
வீராணம், துளசி மணியூர் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரியான குமரன் (வயது 30), நேற்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓடைப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் குமரனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த வீராணம் காவல் நிலைய போலீசார், சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கும் நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் யுசிஜி அறிவிப்பை சுட்டிக்காட்டி பிஹெச்டிக்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளதால் சர்ச்சை. 4 ஆண்டுகள் இளநிலை படித்திருந்தாலும் பிஹெச்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!.
புதிய கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என துணைவேந்தர் விளக்கம்.
“டிக்கெட் கட்டணம் 100 ரூபாயில் 30 ரூபாயை வரியாகச் செலுத்துகிறோம். படத்துக்கு ஒரு கோடி ரூபாய் வசூலானால் தயாரிப்பாளருக்கு ரூபாய் 40 லட்சம் மட்டும் கிடைக்கிறது. இந்த வரியை குறைத்தால் தமிழகத்தில் சினிமா தொழில் வளரும். பெண்கள் படிக்கும் கல்லூரியில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்தால் குற்றங்கள் குறையும்” என சேலத்தில் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி பேட்டி அளித்துள்ளார்.
அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்டவுள்ளது. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 8.2.2025.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1)காலை 9 மணி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாள் திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 2) காலை 10 அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 3) காலை 10 வாராந்திர குறைத்தீர் நாள் கூட்டம் 4)காலை 10 மணி கஞ்சமலை அடிவாரத்தில் புதிய ஈஸ்வரன் கோவில் அடிக்கல் நாட்டு விழா.5) அண்ணா நினைவு நாளை ஒட்டி மாரியம்மன் கோவில் ஈசன் கோவில் பொது விருந்து
Sorry, no posts matched your criteria.