India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.டி.வி.அருண்குமார், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உடனிருந்தார்.
கோவை-திருப்பதி இடையே சென்றுகொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கர்ப்பிணி என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அவ்வழியாக வந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தினர்.
பிப்.11 தைப்பூசம், பிப்.12 பௌர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை (பிப்.08) முதல் வரும் பிப்.13ம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சேலத்தில் இருந்து சென்னை, வடலூர், பெங்களூரு, ஓசூருக்கும், மேற்கண்ட இடங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.07) தொடங்கியுள்ளது. பிப்.14- க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செய்முறைத் தேர்வை சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வில் மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜாதிப் பாகுபாடு உள்ளதா என்பதை கண்டறிய, நேற்று (பிப்.06) ஆய்வு நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, ஆர்.டி.ஓ. அபிநயா உள்ளிட்டோர் கைதிகளிடம் ஜாதிப் பாகுபாடு குறித்து கேட்டறிந்தனர். இதுதொடர்பாக, கைதிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 7 மணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரண்டு நாள் இலவச யோகா பயிற்சி முகாம் மாதவம் அரங்கம்.2) காலை 10 மணி தலைவாசல் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாகட்டமாக அமைச்சர்கள் பங்கேற்பு.3) காலை 10 மணி சுகவனேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு பூஜை.4)காலை 11 மணி தமிழ்நாடு ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
சேலம்: அரசுப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவந்த சிவக்குமார் என்பவர், மாணவி ஒருவருடன் போட்டோ எடுத்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க, உடனே அவர் 1098 மூலம் Child Help Line-க்கு தகவல் அளிக்க தொடர்ந்து சிவக்குமார் போக்சோவில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறு தொழில் தொடங்குவதற்கு டாம்கோ கடன் சிறுபான்மையினருக்கு வழங்கும் முகாம் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளில் துவங்கப்பட்டுள்ளதாகவும் தொழில் துவங்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று பயனடையுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பதஞ்சலி யோக் சமிதியின் சேலம் கிளையின் சார்பில் மரவனேரி பகுதியில் உள்ள மாதவம் மண்டபத்தில் பிப்.7,8 என இரண்டு நாட்கள் இலவசமாக ஒருங்கிணைந்த பதஞ்சலி யோகா சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது உள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். இந்த இலவச யோகா பயிற்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.