India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட வருவாய் அலகில், இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரிந்து வரும் 31 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்த தனசேகரன், ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும், அங்கிருந்த பிரவீன்குமார் சேலம் ஆர்.
டி.ஒ. அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த கார்த்திக் ஓமலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம்: கோட்டை மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஆக.6) அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு உள்ளூர் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வருகிற ஆக.23ஆம் தேதி வேலை நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <
சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு தகுதி வாய்ந்த நபர்கள் சுய விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 25-ம் தேதிக்குள் மண்டல தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த கட்டிடங்களில் உள்ள தேவாலயங்களை புதுப்பிப்பதற்கு அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலான தேவாலயங்களுக்கு ரூ.10 லட்சம், 15 ஆண்டுகள் – ரூ.15 லட்சம் மற்றும் 20 ஆண்டுகள்- ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கிரிப்டோ கரன்சி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிலர் இந்த வழக்கிற்கும், கிரிப்டோ கரன்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. வழக்கு விசாரணையில் இருப்பதால், பொதுமக்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்” என தெரிவித்துள்ளார். SHARE IT
சேலம்: மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி இன்று(ஆக.5) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ’கிரிப்டோ கரன்சி சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இதில், சிலர் கிரிப்டோ கரன்சிக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறி கிரிப்டோ கரன்சி இணைய வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. வழக்கு நடைபெறுவதால் பொதுமக்கள் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 02.08.2025 வரை நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.