India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 16 இடங்களிலும், தனியார் மூலம் 16 இடங்களிலும் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படுகிறது. சேலம் நகரில் 6 இடங்களில் கூட்டுறவுக் கடைகளும், 3 இடங்களில் தனியார் மூலம் கடைகள் அமைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 23 இடங்களிலும் முதல்வர் மருந்துக் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகள் என 2,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ளக புகார் குழுவை அமைத்து அறிக்கையை அனுப்ப சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் மட்டும் 149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
சேலத்தில் (பிப்.20) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8.30 மணி தமிழக வெற்றி கழகத்தின் விழா. 2) காலை 9:30 மணி ஓமலூர் ஒன்றியம் காடையாம்பட்டியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகம்” 3) காலை 10 மணி மல்லூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் வரவேற்பு.4) காலை 11 மணிக்கு தனியார் மண்டபத்தில் பாஜக மாநில தலைவர் பங்கேற்பு விழா நடைபெறுகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்.20) மதியம் 12 மணி அளவில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்திற்கு வருகை தர உள்ளார். முன்னதாக மாநில தலைவர் காலை 11.00 மணிக்கு சேலம் மாநகர் மாவட்ட எல்லையான சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வருகிறார். அதற்காக பாஜக தொண்டர்கள் உற்சாக ஏற்படுத்தி உள்ளனர்.
சேலம், அம்மாபேட்டை அரசு பள்ளியில் அறிவியல் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குமரேசன் (57). இவர் ஆய்வகத்திற்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி குமரேசனை கைது செய்தனர். இதனையடுத்து கல்வி அதிகாரி அவரை நேற்று சஸ்பென்ட் செய்தார்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 19) விபத்தில் சிக்கித் தவிக்காமல் இருக்க, வாகனங்களை இயக்கும் போது, செல்போன் பயன்பாட்டை கட்டாயம் தவிர்ப்பீர் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை காவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும்” என சேலம் ஆட்சியர் வேண்டுகோள்.
சேலம் மாநகரில் இன்றைய (பிப்.19) இரவு காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகள் விவரம்: சேலம் டவுன் சரகம் பழனியம்மாள், காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, செவ்வாய்பேட்டை கா.நி அரசு மருத்துவமனை அன்னதானப்பட்டி சரகம், பழனியம்மாள் – காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, கொண்டலாம்பட்டி சரக,ம் தமிழரசி – காவல் ஆய்வாளர் CCB 94981-10740, அம்மாபேட்டை சரகம், மணிவண்ணன் – காவல் ஆய்வாளர் 94981-67695.
சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட, 24 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. டாஸ்மாக் எதிரே பெட்டிக்கடை வைத்து மது அருந்த அனுமதித்தது, கடை இயங்காத நேரத்தில் மது விற்றது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ஆம் தேத முதல் இன்று வரை, மதுபாட்டில் விற்ற 178 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.
Sorry, no posts matched your criteria.