India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.22) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

தவெக தலைவர் விஜய் திடீர் மாற்றமாக சேலத்துக்கு பதிலாக வருகின்ற சனிக்கிழமை கரூரில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் சேலத்தில் திட்டமிட்டப்படி டிசம்பர் 12,13 ஆம் தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவார் என தவெக சேலம் மத்திய மாவட்ட செயாளார் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பிரச்சாரம் நடைபெறும் இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் , அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் (செப்.20) குட்டையில் குளித்த போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நிஷாந்த்(23), மற்றும் பிரசாந்த்(19), நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (செப்.22) 2024-2025 கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

சேலம் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <

சேலம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (செப்.22) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகரில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகரில் தொடர்ந்து மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வருகிறது.

சேலம் மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

சேலம் மக்களே..LIC காப்பீட்டு தொகையை செலுத்த இனி அலையை வேண்டாம். உங்கள் மொபைல் போன் மூலமாக வீட்டில் இருந்த படியே செலுத்தலாம். ‘<

சேலம் செப்டம்பர்-22 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
1) காலை 10 மணி வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.
2)காலை 10:30 மணி மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோட்டை.
3)மாலை 5 மணி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன கவன ஈர்ப்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
Sorry, no posts matched your criteria.