Salem

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சேலத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு

image

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 385 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கிராம ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வரியில்லா வருவாய் மற்றும் இதர கட்டணங்கள் போன்றவை ஆன்லைன் மூலம் வரும் பிப்.28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 24, 2025

குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News February 24, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்ச்சிகள் 

image

சேலத்தில் இன்று (பிப்.24) முக்கிய நிகழ்வுகள். 1)காலை 10 மணி வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. 2) காலை 10 மணி சின்னதிருப்பதி கூட்டுறவு வங்கியில் முதல்வர் மருந்தகம் அமைச்சர் திறப்பு விழா நடைபெறவுள்ளது. 3) காலை 10 மணி மத்திய அரசு கண்டித்து திக சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 4) காலை 11 மணி தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.

News February 24, 2025

பண மோசடி: கேரளாவை சேர்ந்த மூவர் கைது

image

சேலம், எடப்பாடி பனங்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில் ஆன்லைன் வாயிலாக அதிக பணம் சம்பாதிக்க வழிவகை செய்வதாக கூறியதை நம்பி தான் ரூ.5,01,650 பணம் செலுத்தியதாகவும், ஆனால் எதிர்த்தரப்பினர் ஏமாற்றியதாக புகார் அளித்தார். இதனையடுத்து மேற்கொண்டு விசாரணையில் கேரளாவை சேர்ந்த அபிலாஷ், விபின், வித்தியாஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 24, 2025

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய செயலி

image

சேலம், ரயில் நிலையத்தில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல் உதவி செயலி மூலம் ரயில் பயணிகளை விழிப்புணர்வு ஏற்படுத்த, ரயில்வே பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொபைல் செயலியை ரயில் பயணிகள் பதிவிறக்கம் செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News February 24, 2025

விமான சேவையை ரத்துச் செய்த அலையன்ஸ் ஏர் நிறுவனம்!

image

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின் நகரங்களுக்கான இன்று (பிப்.23) இயக்கப்படவிருந்த விமான சேவையை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இருமார்க்கத்திலும் ரத்துச் செய்தது. இதனை சேலம் விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. விமான சேவை ரத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.

News February 23, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News February 23, 2025

கோடைக்காலம் முடியும் வரை வன ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை!

image

தமிழகத்தில் கோடை காலம் முடியும் வரை அதாவது ஜூன் மாதம் முடியும் வரை வன ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை கிடையாது என வனத்துறை அதிகாரிகள் தகவல். வனத்தில் தீ பரவலைத் தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சேலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News February 23, 2025

மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள்

image

சேலம், மேட்டூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாதேஸ்வரன் சுவாமி திருக்கோயிலில் வரும் பிப்.25-ம் தேதி மஹா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இரு மாநில போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

error: Content is protected !!