Salem

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <>மார்ச் 5ம் தேதிக்குள் <<>>விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

பயிர் காப்பீட்டில் ரூ.5,148 கோடி நிவாரணம்: பன்னீர்செல்வம்

image

சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,148 கோடி நிவாரண உதவித்தொகையாக எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

News February 27, 2025

2,000 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை

image

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, ஆத்தூர், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட வேளாண்மை (ம) வேளாண் வணிகம் துறை சார்பில் உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் 2,000 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 27, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் 

image

சேலத்தில் (பிப்.27) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 7.30 மணி பழனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. 2) காலை 10:30 மணிக்கு அரசு மோகன் குமார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை தடுப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. 3)காலை 11 மணி அங்காளம்மன் கோவிலில் இருந்து மயான கொள்ளை புறப்பாடு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

News February 27, 2025

 திருமணம் ஆகாதவிரக்தி வாலிபர் தற்கொலை

image

பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

News February 27, 2025

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர்கார்த்திக்(16). இவர் ஏற்காடு அருகே உள்ள சேட்டுக்காடு ஓடையில், நேற்று நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால், மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி கார்த்திக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ஏற்காடு போலீசார், கார்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News February 26, 2025

வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம்

image

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் இன்று மாசி மாதம் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரமாக பெருமான் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து  சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் அனைவரும் தரிசித்துச் சென்றனர்.

News February 26, 2025

சேலம் மாவட்ட காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி இன்று பிப்.26 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

News February 26, 2025

பரோடா வங்கியில் 4,000 காலிப்பணியிடங்கள்..APPLY NOW

image

பொதுத்துறை வங்கியான Bank of Baroda-வில் 4,000 தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். கடைசி நாள் – 11.03.2025 ஆகும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 26, 2025

பேருந்து மீது கார் மோதல்- 2 பேருக்கு காயம்!

image

சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பேருந்து பின்புறம், கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!

error: Content is protected !!