India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.htm இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம். முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600005 முகவரிக்கு அக்.31- க்குள் அனுப்ப வேண்டும்.

சேலம் செப்டம்பர் 26 நாளை முகாம் நடைபெறும் இடங்கள் 1.அஸ்தம்பட்டி இந்திய மருத்துவ சங்க கட்டிட திருமண மண்டபம் சொர்ணபுரி
2. அமானி கொண்டலாம்பட்டி பாலமுருகன் திருமண மண்டபம் காட்டூர்
3.ஆத்தூர் துளுவ சங்க வேளாளர் திருமண மண்டபம்
4.தம்மம்பட்டி கொங்கு வேளாளர் திருமண மண்டபம் 5.நங்கவள்ளி மீனாட்சிதிருமண மண்டபம் சவுரியூர் 6.கொங்கணாபுரம் ஸ்ரீராம் மஹால் சமுத்திரம்

சேலம் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <

சேலம் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம்;www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்; இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு சேலம் கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி அழைப்பு விடுத்துள்ளார்.SHARE பண்ணுங்க

எடப்பாடி மூலப்பாதை பகுதியை சேர்ந்த தமிழரசு இவர் தனது நிலத்திற்கு என் ஓ சி சான்றிதழ் தருமாறு தனி தாசில்தார் கோவிந்தராஜிடம் விண்ணப்பித்தார். இதற்கு 15,000 கேட்ட நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தாசில்தார் கோவிந்தராஜ் ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோரை கைது செய்தனர்.

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோக்பானி-ஈரோடு அம்ரித் பாரத் ரயில் சேவை (16601/16602) இன்று (செப்.25) தொடங்குகிறது. வாரத்தில் வியாழக்கிழமைதோறும் ஈரோட்டில் இருந்து ஜோக்பானிக்கும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஜோக்பானியில் இருந்து ஈரோட்டிற்கும் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

சேலம், சூரமங்கலம், பழையூரில் உள்ள மரங்களில், ஏராளமான வவ்வால்கள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. வெளியேற தயங்கிய மக்கள், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணையில் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி வவ்வால்களை வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது:சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!

சேலம் தம்மம்பட்டி உலிபுரத்தைச் சேர்ந்த ரமேஷின் மகன் ஸ்ரீதர் (24). இவர் நேற்று செந்தாரப்பட்டியில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஜங்கமசமுத்திரம் பகுதியில் சாலையோரம் இருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீதரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.இது குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை!

சேலம்: (செப்.25) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️சூரமங்கலம் மண்டலம் தியாகராஜ பாலிடெக்னிக்.
▶️வீராணம் கோவிந்தசாமி கவுண்டர் சுசிலா திருமண மண்டபம் வீராணம்.
▶️சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை.
▶️பெத்தநாயக்கன்பாளையம் பிச்சமுத்து நாயக்கர் திருமண மண்டபம்.
▶️கொளத்தூர் சுகுணா திருமண மண்டபம்.
▶️தாரமங்கலம் கரிய காளியம்மன் கோவில் வளாகம் ராமிரெட்டிபட்டி.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் மற்றும் ஆத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சகி பெண்கள் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.