India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம்: ஏற்காடு செந்திட்டு பகுதியை சேர்ந்த கனகராஜ் (30) என்பவர் நேற்று முன்தினம் இரவு காரிப்பட்டியில் உள்ள மனைவியை அழைத்து செல்வதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி கருமாபுரம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும்போது சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (செப்.25) காலை 08.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் நண்பகல் 12.50 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது.

சேலம்: ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும் காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் மேலே உள்ளது.

இணைப்பு ரயில் வருகையின் மேலும் தாமதம் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செப்.25) நண்பகல் 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என நேர மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது முறையாக நேரம் மாற்றப்பட்டு மாலை 06.30 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக இயக்கப்படுகிறது.

சேலத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களும் இந்தப் பகுதிகளில் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மட்டும் நேற்று வரை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 1,17,240 எண்ணிக்கையிலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மாற்றியமைக்கப்பட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவ.22- ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் த.வெ.க. தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். விஜய்யின் சேலம் வருகையில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது அக்கட்சி தலைமை சுற்றுப்பயண விவரத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மக்களே.., உங்கள் ஊர் கனரா வங்கியில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 394 அப்பரெண்டிஸ் பதவிகளின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள்,எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது.இதில் ஏதேனும் சந்தேகம் அல்லது புகார்கள் இருந்தால்1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது இங்கே கிளிக் செய்து புகார் அளிக்கலாம்.இதனை SHARE பண்ணுங்க!

சேலம் செப்டம்பர் 25 இன்றைய முக்கிய நிகழ்வுகள் 1)காலைஒன்பது மணி பள்ளப்பட்டி ஏரியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் இணைந்து தூர்வாரும் பணி 2) காலை 10 மணி உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைச்சர் ஆய்வு தியாகராஜ பாலிடெக்னிக் 3)காலை 11 மணி மாநகராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் மாநகராட்சி அலுவலகம் 4) மாலை 4 மணி கல்வி அறிவு திட்டம் துவக்க விழா அமைச்சர் பங்கேற்பு
Sorry, no posts matched your criteria.