India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விமான மூலம் சேலம் வருகை. பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் வருகை புரிந்த அதே விமானத்தில் விஜயின் மகன் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் அப்பாதுரை ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இத்திருமணம் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் வந்த முதலமைச்சர் திருமண தம்பதிகளை மரம் கொத்து கொடுத்து வாழ்த்தினார். உடன் அருள் எம்எல்ஏ, சதாசிவம் எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இருந்தனர்.
“வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இணைந்து போட்டியிட வேண்டும்; செயல்பட வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என சேலம் விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
#FairDelimitationForTN என்ற முழக்கத்துடனும், பதாகையுடனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
சேலம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.25) வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தை இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் காந்திநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் அவரது மனைவி தவமணி(38) மற்றும் மூன்று குழந்தைகளை கடந்த 19-ல் அரிவாளால் வெட்டினார். இதில் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர். மனைவி தவமணி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 1ஆம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. தனக்கு ஆதரவான குறிப்பிட்ட நபரை பதிவாளராக கொண்டு வர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அடுத்து பதிவாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை (பிப்.26) மஹா சிவராத்திரி பிப்.27-ல் அமாவாசையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் சேலம், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.