India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆக.15, 18, 21, 23, 26, 29 ஆகிய தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சேலத்தில் (ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
♦️ அஸ்தம்பட்டி மண்டலம் அண்ணாமலை திருமண மண்டபம் கன்னங்குறிச்சி.
♦️ துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர்.
♦️ ஆத்தூர் எல்.ஆர்.சி திருமண மண்டபம் கோட்டை.
♦️ ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி கோட்டகவுண்டம்பட்டி.
♦️ கொங்கணாபுரம் சுய உதவி குழு கட்டிடம் கச்சுப்பள்ளி.
♦️ மகுடஞ்சாவடி ஆர் கே திருமண மண்டபம் காக்காபாளையம்.
சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
2025 – 2026 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் 1895 பள்ளிகளில் கலைதிருவிழா போட்டி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் நவம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.
சேலத்தில், தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் ஓட்டும் திறன், பாதுகாப்பு நெறிமுறைகள், சாலை நெறிமுறைகள், வாகன பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாநகரத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி அரசு கலைக் கல்லூரி அருகே காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஆக.12) சுமார் 879.698 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர்.
சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரம், சேலம் என்ற முகவரியில் ஆக.18 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆக.13, 27, செப்.03 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், ஆக.14, 28, செப்.04 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பெங்களூருவுக்கும் சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் (06547/06548) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.