India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 27) விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம். சாலை விதிகளை மதிப்பீர், என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் ரூபாய் 599 காப்பீடு செலுத்தி ரூபாய் 10 லட்சமும், ரூபாய் 799 காப்பீடு தொகைக்கு ரூ.15 லட்சமும் விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நாளை (பிப்.28) வரை சேலம் கிழக்கு, மேற்கு கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சேலத்தில் பிப்., மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள்கூட்டம் நாளையதினம் வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஆபீஸில் நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும் தபால் மூலமாவும் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்தத்தினங்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 03- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஓசூரு, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <
சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,148 கோடி நிவாரண உதவித்தொகையாக எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, ஆத்தூர், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட வேளாண்மை (ம) வேளாண் வணிகம் துறை சார்பில் உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் 2,000 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் (பிப்.27) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 7.30 மணி பழனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. 2) காலை 10:30 மணிக்கு அரசு மோகன் குமார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை தடுப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. 3)காலை 11 மணி அங்காளம்மன் கோவிலில் இருந்து மயான கொள்ளை புறப்பாடு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர்கார்த்திக்(16). இவர் ஏற்காடு அருகே உள்ள சேட்டுக்காடு ஓடையில், நேற்று நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால், மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி கார்த்திக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ஏற்காடு போலீசார், கார்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.