Salem

News August 15, 2025

லாரிகளுக்கும் கட்டணம் செலுத்தும் முறை வேண்டும்

image

ஆண்டுக்கு ரூபாய் 3,000 புதிய பாஸ்டேக் பாஸ் கட்டண முறை இன்று (ஆக.15) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை லாரிகளுக்கும் கொண்டு வர வேண்டும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்று சேலம் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாஸ்டேக் பாஸ் மூலம் சுமார் 200 முறை சுங்கச்சாவடி களை கடந்துச் செல்லலாம் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

News August 15, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி இறுதி துணைத்தேர்வு!

image

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழைய பாடத்திட்டத்தின் படி தேர்ச்சிப் பெறாத பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும். தேர்ச்சிப் பெறாத பயிற்சியாளர்கள் ஆக.20- க்குள் மேலாண்மை நிலையத்தினை நேரில் அணுகி உரிய தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

சேலம் வழியாக ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக திருநெல்வேலி- ஷிமோகா இடையே சிறப்பு ரயில்களை (06103/06104) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் ஆக.17- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ஷிமோகா டவுனுக்கும் ஆக.18- ஆம் தேதி ஷிமோகாவில் இருந்து திருநெல்வேலிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவித்தனர்.

News August 15, 2025

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற முகவரியில் வருகின்ற 30 10 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

News August 15, 2025

சேலத்தில் இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

image

இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி வீட்டு மின் உபயோக பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. Home Electrical Appliance Service தேநீர், மதிய உணவு, சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசம். 10வது வகுப்பு தேர்ச்சி, 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் சேரலாம். ஆக.22-க்குள் அடையாள சான்று நகல்களுடன் நேரில் விண்ணப்பிக்கவும். R.R.திருமண மண்டபம், கொண்டலாம்பட்டி, சேலம்.

News August 15, 2025

சுதந்திர தின விழா- ஜொலிக்கும் சேலம் ரயில் நிலையம்!

image

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.14) சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண மின்விளக்குகளில் ஜொலித்த ரயில் நிலையத்தை ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான படத்தை சேலம் கோட்டம் சமூவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

News August 15, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 15, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News August 14, 2025

700 ஆண்டுகள் பழமை: பள்ளி மாணவர்கள் அசத்தல்!

image

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின்படி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகுமார் மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது அது 700 ஆண்டுகள் பழமையான, 13-ஆம் நூற்றாண்டு போர் வீரன் நடுகல் என உறுதி செய்யப்பட்டது.

News August 14, 2025

சேலம்: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

image

சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு தடுப்பூசிப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் முதல் கட்டமாக வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!