Salem

News March 2, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.02 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

News March 2, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (13351, 13352) இருமார்க்கத்திலும் ஒடிஷா மாநிலம், நோர்லா ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் மறு அறிவிப்பு வரும் வரை 2 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

லக்ட்ரானிக் பொருட்கள் 5ம் தேதி ஏலம்

image

சேலம் மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட இலக்கிய எலக்ட்ரானிக்ஸ் அதன் சார்பு உபகரணங்கள் பழுதாகி உள்ளன. அதை கழிவு நீக்கம் செய்ய வருகின்ற ஐந்தாம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திலும் அரசு விதிப்படி தகுதி சான்று பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 500 முன்வைப்பு தொகை செலுத்தி பங்கேற்கலாம் என போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

News March 2, 2025

8, 10, 12 வகுப்பு முடித்தர்களுக்கு வேலை

image

சேலம், ஆத்தூரில் வரும் மார்ச் 8ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 20,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விபவரங்களுக்கு 0427-240150 என்ற எண்ணை அழைக்கவும்.

News March 2, 2025

சேலத்தில் கருகலைப்பு: அதிரடி நடவடிக்கை

image

சேலத்தில் கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிமுறைகளை மீறி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவர், நர்ஸ் உட்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்தனர். விசாரணையில், இங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை கலைக்க தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீற கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

News March 2, 2025

‘முழு கவனமும் சாலையில் மட்டுமே இருக்கட்டும்’ 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார். 01) “வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்கவும். உங்களது முழு கவனமும் சாலையில் மட்டுமே இருக்கட்டும்..! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 1, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.01 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 1, 2025

சேலத்தில் 16 லட்சம் மோசடி? ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

image

மாநகர ஆயுதப்படை எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இவர் லோகாம்பாள் என்பவரிடம் 16 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News March 1, 2025

அரசுப் பள்ளிகளில் 25,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு

image

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,000 குழந்தைகளை 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்துள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- சேலம் ஆட்சியர். 

News March 1, 2025

டிகிரி போதும்..இந்திய அஞ்சல் வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!