India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோமதி நேற்று மாலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல், பொன்னாம்மேட்டைச் சேர்ந்த ஜான்சி ராணி மற்றும் திருமலைகிரியைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய மூன்று இளம்பெண்களும் அடுத்தடுத்து மாயமாகியுள்ளனர். இந்த மர்ம நிகழ்வுகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பெண்களையும் அம்மாபேட்டை மற்றும் இரும்பாலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு, உங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அத்தொகையைப் பெற QR Code ஸ்கேன் செய்து, PIN உள்ளிடச் சொல்லி அறிவுறுத்துவார்கள். அத்தகைய நபர்களை நம்பி QR Code ஸ்கேன் செய்து PIN உள்ளிடும் போது, உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும். இத்தகைய மோசடி அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்க வேண்டாம் என சேலம் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு வருகை தந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேச உள்ளார். முதலமைச்சர் வருகைக்காக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் இருபுறங்களும் கொடிகள் நடப்பட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட நிறுவனங்கள் மீது பண்டிகை விடுமுறைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று தொழிலாளர் துணை ஆய்வாளர் நடத்திய ஆய்வில், 37 கடைகள், 64 உணவு நிறுவனங்கள், 7 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 108 நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 148 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
சேலம் மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.