Salem

News March 7, 2025

சேலம் மாநகராட்சி ஆணையாளர் நியமனம்

image

சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத் சிங் மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக இளங்கோவனை நியமித்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இணை இயக்குநராக இளங்கோவன் தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களை 94450-29473, 0427-2280348 எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News March 7, 2025

1,928 இளைஞர்களுக்கு ரூ.264.44 கோடி மானிய கடன்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் பயின்று, 1,928 இளைஞர்கள் ரூ. 258.44 கோடி கடன் பெற்று, பல்வேறு தொழில்களை தொடங்கி வாழ்வின் முன்னேற்றம் கண்டு வருகின்றனர் என்றும், அவர்களுக்கு ரூ.77.34 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

சேலத்தில் வேலை! APPLY NOW

image

சேலத்தில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.<<>> ஊதியம் ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 7, 2025

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு 

image

நங்கவள்ளி அருகே சாணாரப்பட்டி ஊராட்சி கூலிக்காட்டை சேர்ந்தவர் பழனி. இவர் 8 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகில் 8 ஆடுகளையும் கட்டி வைத்து இருந்தார். அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பழனி எழுந்து வந்து பார்த்தார். அப்போது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள் 

image

சேலத்தில் இன்றைய( 7.3.25) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9:30 மணி அரசு மகளிர் கலை கல்லூரியில் மகளிர் தின விழாவில் கலெக்டர் பங்கேற்பு. 2) காலை 10 மணி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறுகிறது. 3) மாலை 4:30 மணி வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 4) மாலை 6 மணி கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவுள்ளது.

News March 7, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்கள் கைபேசி செயலி மூலம், தங்களது வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கி பயன்பெறலாம். இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் ஒப்பந்தம் மேற்கொள்ள மற்றும் முழு விவரங்களை அறிய சேலம் மாவட்ட செயற்பொறியாளர் அவர்களையோ அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

image

சேலத்தில் 14வயது சிறுமிக்கு, குமரேசன் என்பர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அச்சிறுமி ஆசிரியரிடம் கூறுகையில், ஆசிரியர் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அவர், இதுகுறித்து புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், குமரேசனுக்கும், சிறுமியின் தாய்க்கும் பழக்கம் இருந்த நிலையில், கடந்த மாதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பின் 2 பேரை கைது செய்தனர்.

News March 7, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களை 94450-29473, 0427-2280348 எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News March 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மார்ச் 6 இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!