India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியலில் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.9,000 உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

சேலம் வழியாக செல்லும் செகந்திராபாத்-திருவனந்தபுரம் சென்ட்ரல்-செகந்திராபாத் சபரி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேரமும், ரயில் எண்ணும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாள்தோறும் மதியம் 02.45 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் மாலை 06.20 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். காலை 06.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.00 செகந்திராபாத்தை அடையும்

ஆயுதப்பூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக செல்லும் வகையில் சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (செப்.30) சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், அக்.05-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம்,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் சேலம் மாநகர பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த போஸ்டர்களை த.வெ.க.வினர் கிழித்தெறிந்தனர். கரூரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு விஜய்யை கைது செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) இன்று (செப்.29) காலை 08.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக பிற்பகல் 03.30 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை, ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள், இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித் உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட https://scholarships.gov.in இணையதளத்திலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையும் அணுகலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த 13-வது தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பேன்கேட் சில்லாட் சாம்பியன்ஷிப் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 7 பேர் பங்கேற்று பதக்கங்களை வென்று அசத்தினர். அவர்களை சேலம் மாவட்ட பேன்கேட் சில்லாட் அசோசியேஷன் செயலாளர் அஸ்வின் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ’Trainee Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். B.E/ B.Tech, CA/CMA, MBA/PGD, PG படித்தவர்கள் https://hudco.org.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள் அக்.17ஆம் தேதியாகும்.அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் சேலம் அரசு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்து, வழித்தடங்கள் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானியங்கள் பரப்பு அதிகரிக்கும் திட்டம், நுண்ணீர் பாசனம், அட்மா, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.144.73 கோடி மானியமும், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் விவசாயிகளுக்கு ரூ.147.79 கோடி மானியமும் என இருதுறைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.292.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.