India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: சீலநாயக்கன்பட்டி, காஞ்சிநகரையைச் சேர்ந்த சேகர் (84) உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ் 18-ஆம் தேதி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை துக்கத்தில் இருந்த மனைவி யசோதா (74) பேனிக் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். கணவன் மனைவி அடுத்தடுத்த 2 தினங்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் ▶️தாண்டவராயபுரம் தாண்டவராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ▶️எடப்பாடி நகராட்சி அலுவலகம் எடப்பாடி ▶️செந்தாரப்பட்டி ரெட்டியார் மண்டபம் பஜனைமட தெரு, செந்தாரப்பட்டி ▶️நங்கவள்ளி விசுவாமித்திரர் மல்லிகை மண்டபம் புத்துப்பேட்டை
▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யம் திருமண மஹால் பெரியகிருஷ்ணாபுரம்
▶️ காடையாம்பட்டி ஆர்பிசாரதி தொழில்நுட்பகல்லூரி பூசாரிப்பட்டி
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கையில்சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் எல்லா பருவ காலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற வீரிய ரக வம்பன்-11 உளுந்து விதை விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைத்த 90 நாள் முதல், 110 நாள் வரையில் வறட்சி, நோய் தாங்கி வளர்ந்து, ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை மகசூல் தரவல்லது. உளுந்து விதை தேவைப்படுவோர் 9944597160 அழைக்கலாம்.
உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
ஆவணி அமாவாசை, வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வரும் ஆக.22- ஆம் தேதி முதல் ஆக.25- ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 120 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்களில், 67,904 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbsim.in வழியாக விண்ரப்பிக்கலாம்.கடைசி தேதி ஆக-29 ஆகும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக 21-ல் எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கலாம்.SHARE பண்ணுங்க
தீபாவளிக்கு ஒருநாள் முன்னதாக பயணிக்கப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.19) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது. குறிப்பாக, பெங்களூருவில் இருந்து சேலம் வழியே நாகர்கோவிலுக்கு செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புக்கிங் தொடங்கிய 3 நிமிடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பின. அந்த ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளையும், தேவைகளையும் எடுத்துரைக்கலாம் என்று கூறியுள்ளார்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.