India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.02) உங்கள் தலைக்கவசம் ஆபத்தில் உள்ளது, ஆனால் நீங்கள் ஆபத்தில் இல்லை. பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தினமும் பல ஆயிரம் பேர், பயணம் செய்கின்றனர். பயணம் செய்யும்போது, சேவை குறைபாடு ஏற்பட்டாலோ, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர், பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டாலோ, இதுகுறித்து, 1800 599 1500, 94892 – 03900 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே!

சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

சேலம் மாவட்ட, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம், டிச.,13ல், போட்டித்தேர்வை நடத்த உள்ளது. இதற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள், தனியார் மையத்தில் பயிற்சி பெற்றால், அதற்கான கட்டண அலுவலகத்தில் பதிவு செய்து, 2,000 ரூபாய் கட்டண தொகையை திரும்ப பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0427 – 2902903 அழைக்கவும்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை விலகி, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட சேலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் பெ.கண்ணன் அவர்கள் காந்தியடிகள் காவலர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவ்விருது தமிழக முதலமைச்சரால் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்தும், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் ஓமலூர் பகுதிகளில் தவெக தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதில் தளபதி விஜய் உடன் நிற்கிறோம் எனும் தலைப்பில் ‘தடுமாறினாலும் ஒருநாளும் தடம் மாற மாட்டோம் அண்ணா! எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே’ எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1.அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2. இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3. ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
4. <

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

சேலம் (அக்டோபர் 2) இன்றைய முக்கிய நிகழ்வுகள் 1)காலை 10 மணி காதி கிராப்ட் அண்ணா பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை -மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு 2)காலை 10 மணி காந்தி ஜெயந்தி காந்தி சிலைக்கு காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு 3)காலை 10:30 மணி காமராஜர் நினைவு தினம் பட்டை கோவில் அருகே உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தல்
Sorry, no posts matched your criteria.