Salem

News March 8, 2025

நடிகருடன் நடனமாடி அசத்திய மாணவிகள் 

image

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில், பெண்கள் தின விழா நடைபெற்றது. இதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட நடிகர் பவிஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், கல்லூரி மாணவிகளுடன் நடனம் ஆடினார்.

News March 8, 2025

சேலம் மாவட்டத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு

image

வெயில் காரணமாக பீர் வகைகளின் விற்பனை சேலம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. அதேவேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்டவைகளின் விற்பனை சற்று சரிந்துள்ளது. கோடை என்பதால் பீர் வகைகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது. எனவே அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக பீர் வகைகள் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News March 8, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

image

ஜோலார்பேட்டை ரயில் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, மார்ச் 08,09,11,15,16 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரையிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள், திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

சேலத்தில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க

News March 8, 2025

சேலம் வழியாக ப்ரௌனிக்கு சிறப்பு ரயில்கள்

image

ஹோலி பண்டிகையை முன்னிட்டு,வரும் மார்ச் 08,15 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 11,18 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பலூர், விஜயவாடா வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News March 8, 2025

சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

image

மேட்டூரை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், அம்மாபேட்டையை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சைபர் குற்றம் தொடர்பான புகார்களுக்கு 1930 எண்ணை அழையுங்கள். இது போன்ற மோசடியில் சிக்கி கொள்ளமால் இருக்க இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 7, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகரில் இன்று (7-3-2025) இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய உட்கோட்டாக்களில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். 

News March 7, 2025

சேலம் மாநகராட்சி ஆணையாளர் நியமனம்

image

சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத் சிங் மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக இளங்கோவனை நியமித்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இணை இயக்குநராக இளங்கோவன் தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களை 94450-29473, 0427-2280348 எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News March 7, 2025

1,928 இளைஞர்களுக்கு ரூ.264.44 கோடி மானிய கடன்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் பயின்று, 1,928 இளைஞர்கள் ரூ. 258.44 கோடி கடன் பெற்று, பல்வேறு தொழில்களை தொடங்கி வாழ்வின் முன்னேற்றம் கண்டு வருகின்றனர் என்றும், அவர்களுக்கு ரூ.77.34 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!