Salem

News October 3, 2025

சேலத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

image

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே நிலைக் கொண்டுள்ளது. சேலம் உள்பட சில மாவட்டங்களில் இன்று (அக்.03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 3, 2025

சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள்!

image

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக இயக்கப்படும் பெங்களூரூ-கொல்லம்-பெங்களூரூ இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (06219/06220) அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.04,11,18 தேதிகளில் பெங்களூரூவில் இருந்தும், அக்.05,12,19 தேதிகளில் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News October 3, 2025

சேலம்: போலீசார் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

image

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் 60 சதவீதம் நிரம்பியுள்ளது.ஆனால் இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஏரியின் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பது, மீன் பிடிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நீர் நிலைகளுக்கு செல்ல கூடாது என பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறை வழங்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தல்!

News October 3, 2025

சேலம்: இருசக்கர புதிய வாகனம் வாங்க ரூ.10,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

image

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், வரும் அக்.6ம் தேதி புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சேலம், ஆத்தூர் ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 3, 2025

சேலம் கோட்டத்தில் 4 நாட்களில் 35 லட்சம் பயணிகள்!

image

அரசு விடுமுறை நாட்களான காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைகள் இணைந்திருந்ததால், சொந்த ஊர்களுக்குச் செல்லவும், பண்டிகைக்காகப் பயணிக்கவும் பொதுமக்கள் அதிக அளவில் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக, சேலம் கோட்டப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 4 நாட்களில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 3, 2025

சேலம்: தீ விபத்தில் தந்தை-மகன் உயரிழப்பு!

image

கெங்கவல்லி அருகே நடுவலூர் சின்னம்மன் கோயில் அருகே வசித்த ராமசாமி (47), இவரது மகன் ப்ரீத்தீஷ் (11) ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.தீ பற்றி எறிந்து பரவியதில் ராமசாமியும், ப்ரீத்தீஷும் பலத்த தீ காயமடைந்தனர்.சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை இறந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி மகனும் நேற்று இறந்தார்.

News October 3, 2025

சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

சேலம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

சேலம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News October 3, 2025

சேலத்தில் ஒரே நாளில் 76 வழக்கு!

image

காந்தி ஜெயந்தி தினத்தன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் நகரம், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 99 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், விதிமுறைகளை மீறி இயங்கிய 76 நிறுவனங்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!