Salem

News March 15, 2025

சேலம் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குரூப்

image

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் ரயில்வே போலீசார் வாட்ஸ் அப் குழுவை (94981-01963) அறிமுகம் செய்துள்ளனர். மேலும் “அறிமுக இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருள்களை வாங்கி உண்ண வேண்டாம். நகை அணிந்து கொண்டு உறங்க வேண்டாம். சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் 139, 1512 அல்லது 9962500500 அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர். இதை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

சேலம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச் 14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News March 15, 2025

கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர்கள் பங்கேற்பு

image

சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 14) கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News March 14, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 14) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 14, 2025

வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

image

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!? 

News March 14, 2025

சேலம் ; கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் பலி 

image

சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News March 14, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; 4 பேருக்குஆயுள் தண்டனை 

image

சேலம் : கடந்த 2017ம் ஆண்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை டிபன் வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்து முள்ளுக்காட்டில் வைத்து 4 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ்  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

News March 14, 2025

சேலம் மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶ சேலம் மாநகராட்சியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கப்படும்.▶சேலம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்படும். ▶சேலம் அன்புச் சோலை மையம். ▶சேலம் பால் நிறுவனம் நவீனமயமாக்கப்படும். ▶சேலம் தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வுகள்.

News March 14, 2025

சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமாக்கப்படும்

image

சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

image

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!